தனியார் பள்ளி மாணவர்கள் ‛சைக்கோ’ போல் இருப்பார்கள்.. சபாநாயகர் பேச்சால் வெடித்த சர்ச்சை
புதுச்சேரி: தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ மாறி தான் இருப்பார்கள். ஆனால் அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி திறன் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பொது அறிவு மட்டுமல்ல உடல் ரீதியாக எந்த நோயும் வருவது இல்லை. மனரீதியான பாதிப்பு என்பதும் வருவது இல்லை. நீங்கள் ஆய்வு நடத்தி பார்த்தாலே உங்களுக்கு நன்றாக தெரியும் என்று புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியது சர்ச்சையாகி உள்ளது.
AoH (Academic of Hypnosis) மற்றும் InSPA (Indian School Pysichology Association) இணைந்து புதுச்சேரி பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் 2 நாள் சர்வதேச மாநாட்டை நடத்தியது. இன்று நடந்த மாநாட்டில் மத்திய இணையமைச்சர் முருகன் பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறி கருத்து சர்ச்சையானது. தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ மாறி தான் இருப்பார்கள் என்று கூறியது தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதுதொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது: பல்வேறு தனியார் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டமே வேறுவிதமாக இருக்கும். 9 ம் வகுப்பு படிக்கும்போதே 10ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். 11ம் வகுப்பு படிக்கும்போதே 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். அந்த மாணவர்களுக்கு உடல் ரீதியாக எந்த பயிற்சியும் கொடுப்பது கிடையாது. உறவு, மனரீதியான பயிற்சி எதுவும் கொடுப்பது கிடையாது.
அந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் மனநிலையை மாற்றிவிடுகின்றனர். அவர்களின் மனம் எல்லாம் வேறு ஒரு இடத்துக்கு சென்றுவிடுகிறது. பிள்ளைகள் எல்லாம் டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர் டாக்டர், இன்ஜினியராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவர்களின் மனநிலை மாறுகின்றபோது உடல் ரீதியான பாதிப்பு மட்டுமின்றி மனரீதியான பாதிப்பும் வருகிறது. அந்த மாணவர்கள் சைக்கோ மாறிதான் இருப்பார்கள்.
நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது பல மாணவர்களை பார்த்துள்ளோம். ஏனென்றால் காலை 7 மணிக்கு அந்த பள்ளியில் விட்டுவிட்டால் இரவு 9.30 மணிக்கு தான் அழைத்து வர வேண்டும். இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் புதுச்சேரியில் அப்படித்தான் உள்ளது.
ஆனால் அரசு பள்ளிகள் அப்படி கிடையாது. அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி திறன் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பொது அறிவு மட்டுமல்ல உடல் ரீதியாக எந்த நோயும் வருவது இல்லை. மனரீதியான பாதிப்பு என்பதும் வருவது இல்லை. நீங்கள் ஆய்வு நடத்தி பார்த்தாலே உங்களுக்கு நன்றாக தெரியும்'' என்றார்.
இப்படி சர்ச்சையாக பேசி உள்ள ஏம்பலம் செல்வம் பாஜக கட்சியை சேர்ந்தவர். இவர் மணவெளி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி உள்ள நிலையில் பாஜகவின் ஏம்பலம் செல்வத்துக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications