புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ3,000 கொரோனா நிவாரண உதவி!
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 3,000 ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் என். ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் அத்தியாவசிய கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இதனால் புதுச்சேரி மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந் தேதி பதவியேற்ற நிலையில் கொரோனா தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனிமைப் படுத்திக் கொண்டார்.
இதனால் இன்றுவரை எந்த ஒரு நிவாரணமும் பொதுமக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவிக்கவில்லை, இந்நிலையில் புதுச்சேரி சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, எம்.எல்.ஏவாக பதவியேற்று கொண்ட ரங்கசாமி துணைநிலை ஆளுநர் மாளிகை சென்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் நிவாரணமாக வழங்குவதற்கான கோப்பிற்கு துணைநிலை ஆளுநரிடம் ஒப்புதல் கேட்டார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அந்த கோப்புக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 3000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
-
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications