மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ஏன் புறக்கணிக்கிறீர்கள்.. நாராயணசாமி ஆவேச கேள்வி
புதுவை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் புதுச்சேரியை ஆள வேண்டும் என்பதற்காகவே மாநில அந்தஸ்து கேட்கிறோம். சுஷ்மா ஸ்வராஜ் குழு பரிந்துரைத்த பிறகும் மத்திய அரசு மாநில அந்தஸ்தை கொடுக்க மறுக்கிறது என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
புதுவையில் காங்கிரஸ்- திமுக கூட்டணியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பை நிகழ்த்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று காலை புதுவை சட்டசபை கூடியது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பை நாராயணசாமி கோரினார். இதையடுத்து அவர் சட்டசபையில் தங்கள் அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டும் மத்திய அரசை குற்றம்சாட்டியும் பேசினார்.

பயிர்கள் நாசம்
அவர் பேசுகையில் மழையால் பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 25 ஆயிரம் வழங்கினோம். கொரோனா காலத்தில் களத்தில் இருந்து பணியாற்றினேன். கொரோனா நேரத்தில் சிலர் வீடுகளை விட்டு கூட வெளியே வரவில்லை. நிவர் புயலின் போது வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டேன். விவசாய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தோம்.

கிரண்பேடி
புதுவை ஆளுநராக இருந்த கிரண்பேடி அன்றாடம் அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தார். யார் எத்தனை தொல்லை கொடுத்தாலும் மக்களுக்காக பாடுபடுவோம். 3. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். புதுவையில் நடைபெற்று வருவதை அனைத்து மக்களும் பார்த்து வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமை எங்கள் ஆட்சிக்கு உண்டு.

95 சதவீதம் நிறைவேற்றம்
புதுவை ஆளுநராக இருந்த கிரண்பேடி அன்றாடம் அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தார். யார் எத்தனை தொல்லை கொடுத்தாலும் மக்களுக்காக பாடுபடுவோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். புதுவையில் நடைபெற்று வருவதை அனைத்து மக்களும் பார்த்து வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமை எங்கள் ஆட்சிக்கு உண்டு.

அ்நதஸ்து
புதுச்சேரிக்கு மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. மாநிலத்தின் வருமானத்தை குறைக்க வேண்டும் என்று சதி திட்டம் தீட்டினார்கள். புதுவைக்கான மாநிலத்தையும் மத்திய அரசு குறைத்து விட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் புதுச்சேரியை ஆள வேண்டும் என்பதற்காகவே மாநில அந்தஸ்து கேட்கிறோம். சுஷ்மா ஸ்வராஜ் குழு பரிந்துரைத்த பிறகும் மத்திய அரசு மாநில அந்தஸ்தை கொடுக்க மறுக்கிறது என்றார் நாராயணசாமி.












Click it and Unblock the Notifications