காங்கிரஸில் திடீர் போர்க்கொடி.. ‘நாராயணசாமிய தூக்குங்க’ 42 பேர் கையெழுத்து- ராகுலுக்கு பறந்த கடிதம்!
புதுச்சேரி : புதுச்சேரி அரசியலில் இனி நாராயணசாமி தலையிடக்கூடாது என்று காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த 42 நிர்வாகிகள் கையெழுத்திட்டு ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 பேரே காரணம்
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் 42 நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ள அந்தக் கடிதத்தில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதுவை மண் காங்கிரஸ் கட்சியின் கோட்டை. ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். இந்த மோசமான தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த தோல்விக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரே முக்கிய காரணம்.

ஒரு வருடம் ஆச்சு
காங்கிரஸ் தோல்விக்கு பிறகு தோல்விக்கான காரணம் குறித்து ஆராய தினேஷ் குண்டுராவ், உத்தம் ரெட்டி ஆகியோரை புதுச்சேரிக்கு அனுப்பியது காங்கிரஸ் மேலிடம். இதில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியத்தை மாற்ற வேண்டும் என தலைமைக்கு தெரிவித்தனர். ஆனால் தேர்தல் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாற்றப்படவில்லை. காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய கோரிக்கை புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும்.

நாராயணசாமி தலையிடக்கூடாது
அப்படிச் செய்தால் தான் வருகிற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். புதுச்சேரி அரசியலில் இனி நாராயணசாமி தலையிடக்கூடாது. புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும். மேலும் கட்சி தொண்டர்களிடமும், மக்களிடமும் நம்பிக்கையை பெற முடியும். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு
ராகுல் காந்திக்கு புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் எழுதிய கடிதத்தால் அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மாற்றக் கோரி, 42 நிர்வாகிகள் டெல்லிக்கே கடிதம் அனுப்பியுள்ளதால், விரைவில் டெல்லி மேலிடம் புதுச்சேரிக்கு குழுவை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications