புதுவையில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் இன்று முதல் உயர்வு! வர்த்தக மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் இன்று மீண்டும் உயர்த்தப்படுகிறது. ஆனால் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பழைய மின் கட்டணமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநில மின் துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படசி 2023- 2024 ஆம் நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய அந்த ஆணையத்திடம் விண்ணப்பிக்க அப்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் கொடுத்தார்.
இதையடுத்து மின் கட்டண உயர்வு தொடர்பாக அந்த ஒழுங்கு முறை ஆணையத்திடம் புதுவை மின் துறை விண்ணப்பித்திருந்தது. அதன்படி இந்த ஆண்டு வீட்டு உபயோகத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 50 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தவும், வர்த்தக பயன்பாட்டுக்கு சராசரியாக ஒரு ரூபாய் வரை கட்டணம் உயர்த்தவும் புதுவை அரசு கேட்டிருந்தது.
2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான மின் கட்டண நிர்ணயம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டமும் நடந்தது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகளால் கட்டண உயர்வு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் அருச விண்ணப்பத்தில் திருத்திய கட்டணத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது.
அதற்கான கோப்புகள் வெள்ளிக்கிழமை அன்று புதுவை அரசுக்கு கிடைத்துள்ளது. அதன் படி புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான முன் கட்டணம் ரூ.2.25-ல் இருந்து ரூ. 2.75 ஆக உயர்த்த புதுச்சேரி அரசு கோரியது. அதை ரூ. 2.70 ஆக உயர்த்த அனுமதி தரப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ. 3.25-ல் இருந்து ரூ. 4 ஆகவும் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.40-ல் இருந்து ரூ. 6 ஆகவும் 301 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் ரூ. 6.80-ல் இருந்து ரூ. 7.50 ஆகவும் உயர்த்த புதுச்சேரி அரசு கோரியதை ஆணையம் அனுமதித்துள்ளது.
வர்த்தக நிறுவனங்களுக்கும் கட்டணத்தை உயர்த்த புதுவை அரசு அனுமதி கோரியிருந்த நிலையில் அந்த ஆணையமோ அதற்கு அனுமதி தரவில்லை. இதனால் பழைய கட்டணமே தொடரும். அதே நேரம் நிலைக் கட்டணம் 1 கிலோவாட் ரூ. 75-ல் இருந்து ரூ. 200 ஆக உயருகிறது. இக்கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவிக்கின்றன.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications