தமிழகம், ஆந்திரத்தில் இருந்து புதுவை செல்லும் குடிமகன்களின் "வயிற்றில் அடித்த" புதுவை அரசு!
Recommended Video
புதுவை: புதுச்சேரியில் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பீர் 10 ரூபாய் வரையும், மற்ற மதுவகைகள் குறைந்த பட்சம் ரூபாய் 7 முதல் 30 ரூபாய் வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளன.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சுற்றுலா மற்றும் மதுபானங்கள் விற்பனை வரி மூலம் வரும் வருமானத்தில்தான் மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதுதவிர மத்திய அரசும் ஒரு குறிப்பிட்ட நிதியை புதுச்சேரிக்கு ஆண்டுதோறும் அளித்து வருகிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மதுபானங்களின் விலை மிகவும் குறைவு. மேலும் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மது வகைகளும் கிடைக்கின்றன. புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதாலும், பல்வேறு வகையான மதுபானங்களை ருசித்து பார்ப்பதற்காகவும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தை சேர்ந்த ஆயிரகணக்கானோர் நாள்தோறும் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மத்திய அரசும் புதுச்சேரிக்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் மதுபானங்களின் விலையை உயர்த்தி அரசின் வருமானத்தை பெருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது கலால் வரியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய விலை உயர்வின்படி, பீர் வகைகள் ரூபாய் 10 வரையும், விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம், ஒயின் உள்ளிட்ப மதுவகைகள் குறைந்தபட்சம் ரூபாய் 7 முதல் 15 ரூபாய் வரையிலும், அதிகபட்சமாக ரூபாய் 15 முதல் ரூபாய் 30 வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

மதுபானங்களின் விலை உயர்வினால் புதுச்சேரியில் உள்ள குடிமகன்களும், மதுவை நாடி புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கலக்கமடைந்துள்ளனர்.



-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications