தோண்டு பள்ளத்தை.. யாரும் உள்ளே வரப்படாது.. புதுச்சேரி போலீஸாரின் திடீர் அதிரடி!
புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் நுழைவதை தடுக்க பள்ளம் தோண்டி பாதையை துண்டிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.
மீதமுள்ள 6 பேரில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையிலும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூடப்பட்ட எல்லைகள்
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால் புதுச்சேரி எல்லைப் பகுதிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகப்பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது.

வழிகளை மறிக்கும் போலீஸ்
இதனால் அங்குள்ளவர்கள் புதுச்சேரி எல்லைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதிகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கிராமங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சிறு சிறு வழிகளையும் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் தடுப்புகள்
அதுபோல் கடலூரைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியை அடுத்த பாகூர் பகுதியில் நுழையாமல் தடுக்க சோரியாங்குப்பம், குருவிநத்தம், கொமந்தான்மேடு போன்ற பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து உள்ளனர். ஆனாலும் கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியிலுள்ள ஆற்றங்கரையையொட்டிய நிலத்தின் வழியாக புதிய பாதையை ஏற்படுத்தி பாகூர் பகுதிக்குள் வருகின்றனர்.

பள்ளம் தோண்டி தடுப்பு
இதனை முற்றிலும் தடுத்திடும் வகையில் சோரியாங்குப்பம் மற்றும் நத்தப்பட்டு ஆற்றங்கரையோர பகுதியில் பாகூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் ஜேசிபி இயந்திரம் மூலம் பாதையில் பள்ளம் தோண்டி கடலூர் பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் உள்ளே நுழையாத படி துண்டித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications