வீட்டை விட்டு வெளியே போகாத நாராயணசாமி.. ஊரடங்கு அனுஷ்டிப்பு!
புதுச்சேரி: பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களை போன்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமியும் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்துகொண்டு சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடுமுழுவதும் மக்கள் இன்று ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு வலியுருத்தியிருந்தார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்திலும் 100 சதவீத மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றும், பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக, புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி இன்று வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


மேலும் வீட்டில் இருந்துகொண்டே காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொண்டு அங்குள்ள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து, உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். மேலும் வரும் 31 ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளின்றி, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.













Click it and Unblock the Notifications