அடடா.. நாராயணசாமி போனதும் பழுதான கிருமிநாசினி தெளிப்பு பாதை.. மக்கள் ஏமாற்றம்!!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில், செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையில், முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்த கிருமி நாசினி தெளிப்பு பாதை, அரை மணி நேரத்திலேயே பழுதானதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, புதுச்சேரி மாநிலத்திலும் அமலில் உள்ளது. இதனால் புதுச்சேரியில் மருந்துக் கடைகளைத் தவிர, மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் அனைத்தையும் பிற்பகல் 1 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே பெரிய மாா்க்கெட்டில் கூட்ட நெரிசல் அதிகளவில் இருந்ததால், அங்கிருந்த காய்கறிக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, புதிய பேருந்து நிலையம் காய்கறி சந்தையாக மாற்றப்பட்டது. இங்கு சமூக இடைவெளியுடன் மக்கள் ஆா்வமுடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா்.
இந்நிலையில் பேருந்து நிலைய நுழைவாயிலில் புதுச்சேரி நகராட்சி மற்றும் தனியார் அமைப்பு சார்பில் கிருநாசினி தெளிப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் நாராயணசாமி இன்று திறந்து வைத்து, அதில் நடந்து வந்தார். அவருடன் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி உள்ளிட்டோரும் நடந்து வந்தனர்.
முதலமைச்சரை தொடர்ந்து, பொதுமக்களும் கிருமிநாசினி பாதை வழியாக அனுமதிக்கப்பட்டனர். இதைனையடுத்து மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைகளைக் கேட்டறிந்த நாராயணசாமி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து காய்கறிகளை வாங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்திவிட்டு, புறப்பட்டு சென்றார். ஆனால், முதலமைச்சர் திறந்து வைத்த கிருமி நாசினி பாதை அரை மணிநேரத்திலேயே பழுதானது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அருண், புதுச்சேரி மாநிலத்தில் 5 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் முத்தியால்பேட்டை மற்றும் அரியாங்குப்பம், திருபுவனை பகுதிகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் தயவு செய்து வெளியே வரவேண்டாம். இன்னும் 5 நாட்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். மேலும் கடந்ந 15 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய 1,523 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 9,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications