புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை... நிம்மதி அடைந்த குடும்பத்தினர்
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வெளியாகியுள்ளது.
இது நாராயணசாமியின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது.
முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் நாராயணசாமிக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் பரவல்
புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையிலும் நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இரண்டு நாட்கள் அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

கொரோனா சோதனை
முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருடன் பணியாற்றிய மற்ற ஊழியர்கள் மற்றும் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு இன்று வெளியாகிய நிலையில் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கலக்கத்தில் இருந்த நாராயணசாமியின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் இப்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

வயது முதிர்வு
நாராயணசாமி 70 வயதை கடந்தவர் என்பதாலும், அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர் என்பதாலும் அவரை வெளியே செல்ல வேண்டாம் என அவரது குடும்பத்தினர் கோரி வருகின்றனர். முதலமைச்சராக இருந்துகொண்டு அப்படி இருப்பது ஏற்புடையதல்ல எனக் கூறிவிட்டு வழக்கமான பணிகளை அவர் கவனித்த வண்ணம் இருக்கிறார். மேலும், ஆலோசனைக் கூட்டங்களை நேரில் நடத்துவதை தவிர்த்து காணொலி மூலம் அதை நடத்துகிறார்.

கொரோனா டெஸ்ட்
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் மாதம் இறுதியில் அவர் இந்த சோதனையை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருடன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கொரோனா சோதனை நடத்திக்கொண்டனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications