வங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்... சேமிப்பு பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் வங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலாலும், மெத்தனப் போக்காலும் சேமிப்பு பணத்தை எடுப்பதற்குள் மூதாட்டி ஒருவர் படாதபாடு பட்டுள்ளார்.
மூதாட்டி சேமிப்பு பணத்தை எடுக்கச் செல்லும் போதெல்லாம் வங்கியில் பணம் இல்லை, நாளைக்கு வா, இரண்டு நாள் கழித்து வா எனக் கூறி ஊழியர்கள் அலைக்கழித்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவச் செலவுக்கு பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றத்திலும், அச்சத்திலும் வங்கியில் அந்த மூதாட்டி கண்ணீர்விட்டு கதறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலம்
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகில் உள்ள பொறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கிருஷ்ணவேணி என்ற 90 வயது மூதாட்டி சேமிப்புக் கணக்கில் ரூ.10,500 வைத்துள்ளார். அதனை அவரது மருத்துவச் செலவுக்காக எடுப்பதற்காக வங்கிக்கு சென்ற போது, இதயத்தில் ஈரமில்லாத அந்த வங்கி ஊழியர்கள் வங்கியில் பணமில்லை இன்று போய் நாளை வா என்கிற வகையில் தொடர்ந்து அலைக்கழித்துள்ளனர்.

கண்ணீர் விட்டு கதறி
இதையடுத்து மூதாட்டி கிருஷ்ணவேனி தனது பேரனை அழைத்துக்கொண்டு அந்த வங்கிக்கு சென்ற போதும் வங்கியில் இருந்து அதே பதில் தான் கிடைத்துள்ளது. ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பத்தாயிரம் ரூபாய் சேமிப்பு பணத்தை திருப்பிக் கொடுக்கக்கூட முடியாத இந்த நிலை புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வங்கி ஊழியர்கள் பணம் வரவில்லை பாட்டி வந்தபின்பு கூறுகிறோம் எனச் சொல்லியதால் மனமுடைந்த கிருஷ்ணவேனி வங்கியிலேயே கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

ஆறுதல்
இதையடுத்து பாட்டி கிருஷ்ணவேணியை ஆறுதல் படுத்தி சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பேரன். வங்கியின் இந்த நடவடிக்கையால் அதில் கணக்கு வைத்துள்ள 600-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு அவசரத்திற்கு உதவும் என்பதற்காக தான் வங்கியில் பொதுமக்கள் சேமிப்பு நடைமுறையை பின்பற்றுகின்றனர். ஆனால் அவசரத்திற்கே உதவவில்லை என்றால் வங்கியும் தேவையில்லை, வங்கிக்கணக்கும் தேவையில்லை என்ற மன நிலைக்கு தான் மக்கள் தள்ளப்படுவார்கள்.

தீர்வு எப்போது
புதுச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி என்றில்லாமல் தமிழகத்தின் பல வங்கிகளிலும் நிதிச்சிக்கல் நிலவி வருவதை அறிய முடிகிறது. இது குறித்து உரிய அதிகாரிகளும், அரசும் கவனத்தில் கொண்டு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications