என் ஆர் காங்கிரஸ் - பாஜக இழுபறி ஓவர்.. புதுவை மாநிலங்களவை வேட்பாளராக பாஜகவின் செல்வகணபதி அறிவிப்பு
புதுச்சேரி: புதுவை மாநிலங்களவை எம்.பி. தேர்தல் மனுத்தாக்கல் நாளை நிறைவடையும் நிலையில், மாநிலங்களவை எம்பி வேட்பாளராக பாஜகவின் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் தற்போது என்ஆர் காங்கிரஸ் - பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜகவுக்கு நியமன எம்எல்ஏக்களை சேர்த்து 9 பேரும் உள்ளனர்.

இந்நிலையில் புதுவையில் இருக்கும் ஒரே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கா வேட்புமனு நாளை நிறைவடைகிறது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவதில் என் ஆர் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே மாநிலங்களவை எம்பி பதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
என்ஆர் காங்கிரஸ் - பாஜக இடையே வேட்பாளரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்த நிலையில், புதுச்சேரி மாநிலங்களவை எம்பி வேட்பாளராக பாஜகவின் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக தலைமை புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் நேரடியாகப் பேசியுள்ளது. அதன் பின்னரே மாநிலங்களவை எம்பி பதவியை பாஜகவுக்கு விட்டுத்தர ரங்கசாமி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பாஜகவின் நியமன எம்எல்ஏ-ஆக இருந்தவர் தான் செல்வகணபதி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications