எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி
எஸ்.பி. பாலசுப்ரமணியன் மறைவு கலை உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். எஸ்.பி. பாலசுப்ரமணியன் மறைவு கலை உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திரையுலகினர் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் இரங்கல்கள் தெரிவித்தனர். எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு பேசிய நடிகர் அர்ஜுன் பேசும்போது, "எஸ்பிபிக்கு கண்டிப்பாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்" என்று தெரிவித்திருந்தார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, "இந்திய கலாச்சார பரிமாணம் குறித்த ஆராய மத்திய கலாச்சார துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து இந்த குழுவில் யாரையும் சேர்க்காதது கண்டிக்கதக்கது. ஆகவே அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களையும் குழுவில் இடம் பெற வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
எஸ்.பி. பாலசுப்ரமணியன் மறைவு கலை உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன் வந்துள்ளனர். அனைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நாராயணசாமி இதுவரை முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.9 கோடி வந்துள்ளது என்று கூறினார்.
ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் 5 ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர். நம் மாநிலத்தில் 15 லட்சம் பேர் உள்ளனர். ஆய்வின்படி, 3 லட்சம் நபர்களுக்கு கொரோனா வர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மக்கள் ஒத்துழைக்க வில்லை என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications