செவிலியர் பணி செய்யும் தானியங்கி ரோபோ.. புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை!
புதுச்சேரி: கொரோனா வைரசால் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, உணவு, மருந்து உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக தானியங்கி ரோபோ ஒன்றை புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்வி மையத்தில் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களால் செவிலியர்கள் பணிகளை செய்யும் V2 BUUDY ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளுக்கு காய்ச்சலின் அளவை கண்டறிவது, மருந்துகள் அளிப்பது, கிருமிநாசினி வழங்குவது உள்ளிட்ட பணிகளை இந்த ரோபோ மூலம் செய்யலாம். அது மட்டுமின்றி சிகிச்சை பெறுபவர் இடம் காணொலி காட்சி மூலம் நேரடியாக உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளலாம்.



மேலும் நோயாளிகள் இருக்கும் அறைக்குள் செல்லாமலேயே அவர்களுக்கு உணவும் வினியோகம் செய்ய முடியும்.
இந்த ரோபோவானது ஒருவித செயலின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரோபோ ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகிறது.



இது குறித்த சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் கூறுகையில், இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவ துறையில் உபயோகமானதாக இருக்கும். இதன் செயல்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் பார்வையிடுவார்கள். அதன் செயல்பாடுகளில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் அதை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்துவோம் என தெரிவித்தார்.















Click it and Unblock the Notifications