Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள்.. மிஸ் பண்ணுறேன்.. எஸ்பி இஷா சிங் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: 'புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை 'மிஸ்' பண்ணுகிறேன். நான் டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்' என்று பெண் காவல் அதிகாரி இஷா சிங் சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு மாறுதலாகி போன எஸ்பியான இஷா சிங் கூறியுள்ளார்

புதுச்சேரியில் கடந்த மாதம் 9-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் பணியை அம்மாநில லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் எஸ்பி இஷா சிங் கவனித்தார். இவர் ஐ.ஆர்.பி.என். கமாண்டர் ஆவார். இவர் தவெக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக எடுத்த நடவடிக்கைகள் பெரிய அளவில் பேசுபொருளானது.புஸ்ஸி ஆனந்த் தொடங்கி, தவெகவின் ஒவ்வொரு நிர்வாகிகளையும் அவர் கையாண்டவிதம் மற்றும் நெருக்கடி நிலையில் திறம்பட சமாளித்தது போன்ற காரணங்களால், இஷா சிங்குக்கு பாராட்டுகள் குவிந்தன.

The people of Puducherry are very kind I m going to miss them says SP Isha Singh emotionally

குறிப்பாக புஸ்ஸி ஆனந்திடம், இஷாசிங், 'காவல்துறை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் உத்தரவிடாதீர்கள். இங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும். கரூரில் நடந்த சம்பவத்தில் 41 பேர் பலியான சம்பவம் நினைவில் இல்லையா? அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்கு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள்' என்று கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் எஸ்பி இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்திருந்தது. இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. சிலர் விஜய் ரசிகர்களை கையாண்ட விதத்தை பாராட்டினாலும் மேலிடத்தில் சில மறைமுக அழுத்தங்கள் வந்ததாக விமர்சித்துள்ளனர்.

புதுச்சேரி மக்கள் சிலர், சமூக வலைதளத்தில் இஷா சிங் சீருடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் உள்ள 'மெல்ல விடை கொடு.. விடை கொடு.. மனமே, இந்த நினைவுகள் நினைவுகள் கனமே' என்னும் பாடலை ரீல்ஸ்சாக வெளியிட்டிருந்தார்கள். சிலர் 'மிஸ்.யூ.மேம்', உங்களது கடின உழைப்பு மற்றும் சிறந்த சேவைக்கு 'ராயல் சல்யூட்' என்று கூறியிருந்தார்கள்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இஷா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை 'மிஸ்' பண்றேன். நான் டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்' என்று மிகவும் உருக்கமாக பதிட்டிருக்கிறார். இஷா சிங், தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+