ஆபாச வார்த்தைகளால் திட்டி, வாட்டர் பாட்டிலை வீசி திருநங்கையர் அட்டகாசம்.. புதுச்சேரியில்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியை தகாத வார்த்தைகளால் திட்டி திருநங்கைகள் பணம் கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவரை திருநங்கைகள் இரண்டு பேர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி பணம் கேட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
அந்த காட்சியில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்பது மாட்டாமல், தண்ணீர் பாட்டிலை கொண்டு பயணிகளை தாக்கும் காட்சியும் உள்ளது. இந்த காட்சிகளை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது. புதுச்சேரி பேருந்து நிலையம், முக்கிய சிக்னல்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் திருநங்கைகள் இதுபோன்று மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.