கூட்ட நெரிசல் மேலாண்மை ஸ்பெஷலிஸ்ட்! மனித உரிமை ஆர்வலர்! புஸ்ஸியிடம் கறார் காட்டிய ஈஷா சிங்! யார்?
புதுச்சேரி: விஜய் தலைமையில் தவெக பொதுக் கூட்டம் நடைபெற்ற போது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் விஜய் பொதுக் கூட்டம் நடத்தினார். அப்போது விஜய்யை பார்க்க முண்டியடித்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 73 நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பொதுவெளியில் கலந்து கொள்ளாமல் இருந்தார் விஜய்.

இந்த நிலையில் தமிழக, புதுவை சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் புதுவையில் பொதுக் கூட்டம் நடத்த விஜய் முடிவு செய்து அதற்காக அனுமதி கோரிய நிலையில் முதல் முறையாக யூனியன் பிரதேசமான புதுவையில் தவெக பொதுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் காலை முதலே புதுவை உப்பளம் துறைமுகம் அருகே தொண்டர்கள் திரள தொடங்கினர்.
ஒரு பாஸுக்கு 2 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என கட்சி சார்பில் கூறப்பட்ட நிலையில் ஒரு டோக்கனுக்கு ஒருவரை மட்டும் போலீஸார் அனுமதித்ததால் அங்கு சலசலப்பு எழுந்தது. இதனால் தொண்டர்கள் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் தங்கள் முகங்களை மூடிக் கொண்டு உள்ளே வர முண்டியடித்தனர். அப்போது பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கட்டுக்கடங்காமல் குவிந்த தொண்டர்கள் உள்ளே புகுந்தனர்.
ஒரே நேரத்தில் அங்கிருந்த கேட்டில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. அவர்களை போலீஸார் ஒழுங்குப்படுத்தி ஒவ்வொருவராக அனுமதித்தனர். இந்த நிலையில் சிலரை கியூஆர் கோடு இல்லாமலேயே புஸ்ஸி ஆனந்த் உள்ளே வர அனுமதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்போது தவெக நிர்வாகி ஒருவர் "அங்குள்ள அனைவரையும் உள்ளே விடுங்கள்" என தெரிவித்ததால் அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரி கோபமடைந்து, அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்தினார். அப்போது அங்கு வந்த புஸ்ஸி ஆனந்த், பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே விடுங்கள்" என சொல்ல, உடனே புதுவை எஸ்பி ஈஷா சிங் ஐபிஎஸ், "நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்கிறீர்களா, 40 பேர் இறந்திருக்கிறார்கள்" என ஆவேசமாக தெரிவித்தார்.
அவர் மேலும், "கரூரில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு" என கண்டித்தார். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு எழுந்தது.
யார் இந்த ஈஷா சிங்
ஈஷா சிங், மும்பையை சேர்ந்தவர். இவர் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ்ஸாக தேர்ச்சி பெற்றார். 2014 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். கல்வி மேம்பாட்டிலும் நிர்வாகத் திறமையிலும் சிறந்தவர். இவர் டெல்லி, அருணாசல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பொறுப்புகளில் வகித்துள்ளார்.
பெண் பாதுகாப்பு
குற்றத் தடுப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் தனது திறமையை காட்டினார். புதுவை எஸ்பியாக நியமிக்கப்பட்ட ஈஷா , பொதுக் கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகள், கூட்ட நெரிசல் உள்ளிட்டவைகளில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளார்.
விதிகளை மீறினால் அவர் அதை சகித்துக் கொள்ள மாட்டார். பெண்கள் பாதுகாப்பு, இரவு ரோந்துப் பணிகள், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முன்னோடியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
யார் மகள்
இவர் வேறு யாருமில்லை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி யோகேஷ் பிரதாப் சிங்கின் (ஒய்.பி. சிங்) மகளாவார். முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாதெமியில் யுபிஎஸ்சிக்காக படித்தார். ஒய்.பி. சிங், ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து ஐபிஎஸ் பதவியில் இருந்து விலகினார்.
தாயும் ஐபிஎஸ்
ஈஷாவின் தாய் அபா சிங்கும் இந்திய தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். பின்னர் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதற்காக அவர் தனது தபால் பணியில் இருந்து விலகினார். தற்போது பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
சாதனை
ஈஷாவும் பெங்களூரில் 2018 ஆம் ஆண்டு சட்டம் படித்தார். தற்போது பொது நல வழக்குகளில் வழக்கறிஞராக வாதாடி வருகிறார். செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தும் பணியில் இறந்த ஊழியர்களின் மனைவிகளுக்கு தனது வாத திறமையால் வாதாடி ரூ 10 லட்சம் இழப்பீடு பெற்றுத் தந்தார். ஒரு அதிகாரியால் போலியாக ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பெண்ணுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்தார் ஈஷா சிங். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் நீதியை நிலைநாட்டும் வகையில் ஈஷா செயல்பட்டு வருகிறார்.
-
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்! -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான்












Click it and Unblock the Notifications