செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 50க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண் வன்கொடுமை, ஏமாற்றுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகில் உள்ள புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மணிகண்டன். தவெக ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன், வீட்டின் அருகில் கடை நடத்தி வரும் நிலையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த விவகாரத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Salem tvk police crime

பண நெருக்கடியில் ஆதரவின்றி தவிக்கும் பெண்களை குறி வைத்து பழகும் மணிகண்டன், அந்த பெண்களுக்கு கடன் உதவிகளை செய்து கொடுப்பதைப் போல ஏமாற்றி தவறான எண்ணத்தில் நெருங்கி பழகி வந்திருக்கிறார். அந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதுடன் அதை வைத்தே பாலியல் இச்சைகளை நிறைவேற்றி வந்திருக்கிறார்.

மேலும், சம்மந்தப்பட்ட பெண்களின் வீடியோவை காட்டி மிரட்டி அவரது நண்பர்களின் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் சில பெண்களை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மணிகண்டனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட ஆடியோ ஒன்று இணையத்தில் பரவியது. "நெய்க்காரப்பட்டியை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், எனக்கு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்து உதவி செய்தார். இதன் மூலம் அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். இந்த நிலையில் அவரது செல்போனை பார்த்த போது, அதில் பல பெண்களின் ஆபாச வீடியோ இருந்ததை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

உடனடியாக நான், என்னுடைய வீடியோக்களை அழித்து விட்டேன். அதன்பிறகு அவருடன் பழகுவதை நிறுத்தி கொண்டேன். இதனால் சந்தேகமடைந்த அவர் எனக்கு போன் செய்து, உன்னுடைய ஆபாச வீடியோ என்னிடம் உள்ளதால் நான் கூப்பிடும் போது நீ வர வேண்டும் என்று மிரட்டி வருகிறார். என்னை போல் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மணிகண்டனின் செல்போனை ஆய்வு செய்த காவல்துறையினர், 30 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்திருப்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+