“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்!
சென்னை: தவெகவில் சேர நான் ரூ.50 கோடி வாங்கியதாக குற்றம்சாட்டும் அதிமுகவினர், முடிந்தால் ரெய்டு விட்டு பார்க்கட்டும் என முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆவேசமாக சவால் விட்டுள்ளார். திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க குதிரை பேரம் நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் மரகதம் குமரவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 22 எம்.எல்.ஏ.க்களும் சி.வி. சண்முகம் எஸ்.பி. வேலுமணி தரப்பில் 25 எம்.எல்.ஏ.க்களுமாக அதிமுக பிரிந்தது. மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

தவெகவில் இணைவு
இந்நிலையில், மரகதம் குமரவேல் ஏற்பாட்டில், மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில், இன்று தமிழக வெற்றி கழகத்தில் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தவெகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொச்சைப்படுத்தினார்கள்
இந்தக் கூட்டத்தில் மரகதம் குமரவேல் பேசுகையில், "தவெகவுக்கு ஆதரவு கொடுத்து, மக்களுக்கு நல்லது செய்யலாம் என்ற நல்ல எண்ணத்தோடு தான் ஒரு தரப்பு ஆதரவு கொடுத்தோம். ஆனால், அந்த ஆதரவு கொடுத்ததற்கே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற சில கருப்பு ஆடுகள் என்னை பற்றி தவறாக வலைத்தளங்களில் ஒரு பெண் என்றும் பாராமல் என்னை கொச்சைப்படுத்தி பேசினார்கள்.
இங்கே இருக்கின்ற தாய்மார்களே, இங்கே இருக்கிற சகோதரிகள், என் அக்கா எல்லாரும் இருக்கிறீர்கள். நாமும் ஒரு பெண் தானே, நீங்களும் அமர்ந்திருக்கின்ற ஒவ்வொருவரும் பெண் தானே. ஒரு குடும்பத்தில் இருக்கின்ற ஒரு பெண்ணை, நானும் ஒரு குடும்பத்தில் இருக்கின்ற ஒரு பெண் தானே, எனக்கென்று எல்லாம் இருக்காதா? சொல்லுங்க. எனக்கென்று எல்லாமே இருக்காதா?
அப்போ, அந்த ஒரு பெண்ணை கொச்சைப்படுத்தி எந்த அளவிற்கு இழிவுபடுத்தினோமே, அதே அதிமுகவில் இருக்கின்ற ஊடகங்கள், சமூக ஊடகங்களில் நீங்க வந்து பதிவிடுகிறீர்கள் என்றால், நான் எப்படி உங்களோடு பயணம் செய்ய முடியும்? செய்ய முடியுமா? சொல்லுங்க. மிகவும் கொச்சைப்படுத்தி, கேவலமாக எந்த அளவுக்கு போகணுமோ போகிறார்கள்.
50 லட்சம் வாங்கிருக்காங்க
இதுமட்டுமில்லாமல், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இங்க ஒரு மாவட்டச் செயலாளர் ஒருத்தர் இருக்கிறார் ஆறுமுகம்னு. அவருக்கு போட்டியிடுவதற்கு வந்து வாய்ப்புக் கொடுக்கல தேர்தல்ல. அதனால, மரகதம் குமரவேல் வெற்றி பெறக் கூடாது மதுராந்தகம் தொகுதியில் என ஒரு டீமை சேர்த்தாரு. திமுக வேட்பாளரிடம் 50 லட்சம் வாங்கி இருக்காங்க. என்கிட்ட எல்லாமே இருக்கு ஆதாரப்பூர்வமாக. ஆடியோல இருந்து எல்லாமே இருக்கு. மிக விரைவில் அதை நான் வெளியிடுவேன்.
அப்போ, நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததற்கு நீங்க இப்படிப் பேசுறீங்களே, அப்போ நீங்க அதிமுகவில் இருந்துட்டு, திமுகவுக்கு உடந்தையாக இதே இரட்டை இலை ஜெயிக்கக் கூடாது என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளரிடம் நீங்க 50 லட்சம் வாங்கி இருக்கீங்க உங்களுடைய டீம். அதுல சில ஒன்றிய செயலாளர்கள் இருக்காங்க. நான் வெற்றி பெறவே கூடாது என்பதற்காக பல சதி வேலைகள் எல்லாம் செஞ்சாங்க. அதையும் மீறி மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால், என் மீது நம்பிக்கை வைத்து, நான் உழைத்த உழைப்புக்கு நம்பிக்கை வைத்து என்னை வெற்றி பெற வைச்சாங்க.
சரி இங்கதான் இந்த தொகுதியில துரோகிகள் இருக்காங்க, தலைமையில் இப்படி இல்லாத ஒருவராக இருப்பாங்கன்னு பார்த்தா, தலைமையிலும் எடப்பாடி, திமுகவோடு கூட்டு சேரலாம் என்று நினைத்தார். அதையும் இப்போ உடைந்துவிட்டது. ஏன்னா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி முதல்வராக அமரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சதி வேலைகளை எல்லாம் செய்தார்கள்.
ரெய்டு விடுங்க
தவெகவில் சேர நான் ரூ.50 கோடி வாங்கியதாக குற்றம்சாட்டும் அதிமுகவினர், முடிந்தால் ரெய்டு விட்டு பார்க்கட்டும். எனக்குக் கவலை இல்லை. திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க குதிரை பேரம் நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி தான்.
கடவுள் ஒருத்தர் இருக்காரு, தமிழ்நாட்டு மக்கள் இருக்காங்க. தளபதி தான் முதல்வர், இந்த தமிழகத்தை ஆளப்போகிறார், ஐந்து வருட காலம் இல்லை 20 வருட காலம் நம்முடைய தமிழகம் முதல்வராக தளபதி தான் ஆளப்போகின்றார். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது.
ஜெயலலிதா 'மக்களால் நான், மக்களுக்காக நான்' என்று தமிழக மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், மக்களுக்காக வாழ்ந்து மறைந்தார்கள். அதேபோன்று தான் நம்முடைய தளபதி தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், அதுவும் 'அன்பு' என்ற ஒரு வார்த்தைக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்." எனப் பேசினார் மரகதம் குமரவேல்.
-
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி












Click it and Unblock the Notifications