வேறு ஒரு நபருடன் தொடர்பு.. சுடுகாட்டுக்கு அழைத்து சென்ற காதலன்.. வாக்குவாதம் முற்றி காதலி கொலை
புதுச்சேரி: வில்லியனூர் அருகே கல்லூரி மாணவியை அடித்துக் கொன்று சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

புதுவை திருக்கனூரை அடுத்த சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராஜஸ்ரீ(17). இவர் சேதராபட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். கல்லூரி முடிந்து மதியம் 3 மணிக்கு போனில் வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பஸ்ஸுக்காக காத்திருக்கிறேன். வந்துவிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

சுடுகாடு
ஆனால் அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காட்டேரிக்குப்பம் போலீஸில் புகார் அளித்தனர். இந்த நிலையில் வில்லியனூரை அடுத்த பொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் சாக்கு மூட்டை கிடப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது.

கல்லூரி
இதையடுத்து மேற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் விரைந்து சென்றனர். சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் ராஜஸ்ரீயின் சடலம் இருந்தது. உடலை போலீஸார் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரதீஷ்
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பொறையூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ராஜஸ்ரீயை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில் பொறையூர்பேட்டையயைச் சேர்ந்த பிரதீஷ் இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

காதில் ரத்தம்
இதில் ராஜஸ்ரீயும் பிரதீஷும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ராஜஸ்ரீ வேறு ஒருவருடன் பேசி வந்தது பிரதீஷுக்கு தெரியவந்தது. இதனால் அவரை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்ற பிரதீஷ், ராஜஸ்ரீயிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ராஜஸ்ரீயை அடித்ததில் காதில் ரத்தம் வழிந்து மயங்கி இறந்துள்ளார்.

உதவி
இதையடுத்து தனது 14 வயதான தம்பியின் உதவியுடன் ராஜஸ்ரீயை சாக்குப் பையில் கட்டி ஒரு பள்ளத்தில் போட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 14 வயதே ஆன பிரதீஷின் தம்பியை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications