Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சி. விஜயபாஸ்கரை விடாது விரட்டும் சொத்துக்குவிப்பு வழக்கு.. அக். 7ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டசபைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு இயக்குனரகம் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த 2011, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

C Vijayabaskar in property case to hear today in Pudukottai court

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 60 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அவர் மற்றும் அவரது மனைவியின் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர்.

திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக்கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி பல மாதங்களுக்குப் பிறகு விஜய பாஸ்கர் மீது 216 பக்கத்திலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார் விஜயபாஸ்கர். அப்போது ஆகஸ்ட் 29 ஆம் தேதி மீண்டும் அவரது மனைவியுடன் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டசபைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு இயக்குனரகம் பதிவு செய்த சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆஜராகினர். இதனையடுத்து அடுத்த விசாரணையை செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கிய குற்றப்பத்திரிக்கை நகலில் பக்கங்கள் விடுபட்டதாக புகார் தெரிவித்தனர். இதனையடுத்து குற்றப்பத்திரிக்கையில் அனைத்து பக்கங்களின் நகல்களையும் வழங்க உத்தரவிட்ட புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+