வான்கோழியால் தோகையை விரிக்க முடியாது.. ஒரு போதும் ஆண் மயிலாகாது.. அமைச்சரின் அடடே உவமை!
புதுக்கோட்டை: வான்கோழியால் தோகையை விரிக்க முடியாது என்று அமைச்சர் சி விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20-ஆம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். இந்த ஜல்லிக்கட்டில் தனது புதிய காளையை களமிறக்க உள்ளார்.

ஜல்லிக்கட்டு
நீண்ட தூரம் காளை ஒற்றைப் பாதையில் வேகமாக ஓடி களமிறங்கும்போது விபத்துகள் நேராமல் இருக்கும் வகையில் வாடிவாசல் அமைக்க அமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆண்டு விராலிமலை ஜல்லிக்கட்டில் 2500 காளைகளை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொய் குற்றச்சாட்டுகள்
இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் முதல்வர் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.

எடுபடாது
முதல்வர் இந்த பொய் குற்றச்சாட்டுகளை முறியடிப்பார். இவரது குற்றச்சாட்டுகள் மக்கள் மன்றத்தில் ஒரு போதும் எடுபடாது. அதிமுக அழகிய தோகை விரித்தாடும் ஆண் மயில் போன்றது.

ஆண் மயில்
வான்கோழியை போன்ற சிலர் தோகையை விரித்து ஆட நினைத்தால் வேடிக்கையாகதான் இருக்கும். வான்கோழி ஒரு போதும் ஆண் மயிலாக முடியாது என்று அவர் கூறினார்.

நடவடிக்கை
விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனை படைப்பதற்காக நடத்தப்படவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு விழா குழு சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்படும். இதேபோன்று மாவட்டத்தில் நடக்கும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் விழா குழு சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications