இன்னும் ஐந்தாறு மாதம் தான்! இதே ED உங்க மீது பாயும்! அதிமுக -பாஜகவுக்கு அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை!
புதுக்கோட்டை: இன்னும் ஐந்தாறு மாதங்களில் இதே அமலாக்கத்துறை உங்கள் மீதும் பாயும் என அதிமுக -பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் ரகுபதி.
அமலாக்கத்துறை வந்தாலும் சரி, வருமான வரித்துறை வந்தாலும் சரி திமுகக்காரர்களை அச்சுறுத்த முடியாது என்றும் ஏனென்றால் திமுகவினர் அஞ்சாநெஞ்சர்கள் என்றும் தளபதியின் தம்பிகள் எனவும் சிலேடையாக பேசினார். அமலாக்கத்துறையின் அடுத்த ரெய்டு எந்த அமைச்சர் வீட்டில் என பரபரப்பாக விவாதங்கள் நடந்து வரும் சூழலில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

இதன் மூலம் நாளைக்கே தன் வீட்டுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்த வந்தாலும் கூட ஒன்றும் கிடைக்காது என்பதை தான் அவர் இவ்வாறு சூசகமாக தெரிவித்துள்ளார். இதேபோல் 3 நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையை கலாய்க்கும் விதமாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்'' எனக் கூறியிருந்தார்.
மடியில் கணமில்லாததால் தனக்கு வழியில் பயமில்லை என்றும் மோடிக்கும் பயப்படமாட்டேன், EDக்கும் பயப்பட மாட்டேன் என்றும் தாம் கலைஞரின் பேரன் எனவும் குரல் உயர்த்தியிருந்தார். இப்போது அமைச்சர் ரகுபதி அமலாக்கத்துறையை தைரியமாக விமர்சித்துள்ளதோடு பாஜக ஆட்சி இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் முடிந்துவிடும் என்பதையும் உரக்கக் கூறியிருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்பதை தான் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வாறு ஆட்சி மாற்றம் நிகழும் பட்சத்தில் அமலாக்கத்துறை உங்கள் மீது பாயும் என பாஜக -அதிமுகவுக்கு வெளிப்படையாகவே வார்னிங் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications