234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை - விராலிமலையில் நடைப்பயிற்சியின்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, விஜய் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, யார் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்றும், தோல்வி பயத்தில் விரக்தியில் பேசும் எடப்பாடி பழனிசாமி பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
புதுக்கோட்டை - விராலிமலையில் முதல்வர் முக ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் முதல்வர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இலுப்பூர், அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் விஜய் குறித்த கேள்விக்கு, யார் என்ன செய்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது.
எடப்பாடி விரக்தியில் பேசுவதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும்.
அதிமுக அடிமையாகிவிட்டதால் டெல்லியின் ஆட்சிதான் நடக்கிறது. பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழகத்திற்குப் படையெடுத்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications