நெல்லையை தொடர்ந்து அறந்தாங்கியில் விபரீதம்.. சரிந்து விழுந்த கோவில் தேர்.. சகுணம் சரியில்லையா?
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி நடந்தது. இந்த வேளையில் திடீரென்று தேர் சரிந்து விழுந்தபோது அடியில் 6 பேர் சிக்கினர். இதில் முதியவர் பரிதாபமாக பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராமசாமிபுரம் உள்ளது. இங்கு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடக்கும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

தேர் திருவிழாவின்போது அறந்தாங்கியை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் தான் தேர் திருவிழாவையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி நடந்தது.
நேற்றைய தினம் தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கிராம மக்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த வேளையில் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தேர் சரிந்து விழுந்தது. இதில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டு இருந்தவர்கள் தேரின் அடியில் சிக்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தேரை அகற்றி அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
அப்போது ராமசாமிபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 70) என்பவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்தனர். அப்போது மகாலிங்கம் என்பவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
இதையடுத்து மற்ற 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அலங்கார பணியின்போது தேர் சரிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக தேர் மற்றும் தேரோட்டத்தின்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அப்போது தேருக்கான வடம் அறுந்தது. அந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பக்தர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதோடு அபசகுணம் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications