புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாக்கள்... திமுக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில் திமுக எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை மாவட்ட நிர்வாகம் தவிர்ப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 3 திமுக எம்.எல்.ஏக்களுக்கும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கும் இடையே அவ்வப்போது லடாய் ஏற்பட்டு வருகிறது.
அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் உரிய மரியாதை தருவதாகவும், திமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

6 எம்.எல்.ஏக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுகவை சேர்ந்தவர்களும், 3 தொகுதிகளில் அதிமுகவை சேர்ந்தவர்களும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்நிலையில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களையும் அரசு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முறையாக அழைப்பு விடுப்பதில்லை என்றும், தொடர்ந்து அவமானப்படுத்தப் படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

அதிமுக மகளிரணி
இதனிடையே கடந்த வாரம் திருமயம் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியை கடுமையாக விமர்சித்தார். மாவட்ட ஆட்சியரா இல்லை அதிமுக மகளிரணிச் செயலாளரா எனக் கேள்வி எழுப்பியதோடு, கூட்டுறவு பதிவாளர் தீபாவையும் கடுமையாக விமர்சித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஆல் இன் ஆல் அமைச்சர்
புதுக்கோட்டையை பொறுத்தவரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டம் ஆகும். இங்கு ஆல் இன் ஆல் அவர் எடுக்கும் முடிவுகள் தான், அப்படியிருக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சியரை மட்டும் குறை சொல்வதில் நியாயமில்லை. இது அவர்களுக்கும் தெரியும் ஆனாலும் ஆட்சியர் உமா மகேஸ்வரியை வைத்து எதற்காக அரசியல் செய்கிறார்கள் எனப் புரியவில்லை என்கிறார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரியும் முக்கிய பெண் அதிகாரி ஒருவர்.

காவல்நிலையம்
இந்நிலையில், அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக திமுக எம்.எல்.ஏ. ரகுபதி மீது சேக் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications