மது கிடைக்காத விரக்தி.. குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த இரு மீனவர்கள் பலி
புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினத்தில் மது கிடைக்காத விரக்தியால் குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த இரு மீனவர்கள் பலியாகிவிட்டனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து கடந்த 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 144 தடையுத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து முடக்கப்பட்டது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் குடிமகன்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதன் எதிரொலியாக புதுக்கோட்டையில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராஜா, அன்வர் ராஜா, அருண்பாண்டி ஆகியோர் ஆவர். இவர்கள் மூவரும் மது கிடைக்காத விரக்தியில் கடந்த 2 ஆம் தேதி போதைக்காக குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்துள்ளனர்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ராஜாவும், அருண்பாண்டியும் சிகிச்சை பலனின்றி இன்று பலியாகிவிட்டனர். மற்றொரு மீனவரான அன்வர்ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications