நல்லா சாப்பிட்டே 10 நாளுக்கு மேல ஆகுது.. கொதித்து கூறும் டெல்டாவாசிகள்
தமிழக அரசை கண்டித்து மாவட்டங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
Recommended Video

புதுக்கோட்டை: "நல்லா சாப்பிட்டே 10 நாளுக்கு மேல ஆகுது" என்று புயல் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு 14 நாட்களாகியும் இன்னும் நிலைமை சீராகவில்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கோபமாக உள்ளனர்.
புயல் பாதிப்பு காரணமாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்றொரு புறம் மின் ஊழியர்கள் இரவு பகலாக வேலை பார்த்துதான் வருகிறார்கள்.

அரசு பஸ் சிறைபிடிப்பு
எனினும் சில பகுதிகளுக்கு கரண்ட்டே இதுவரை வராமல் உள்ளது. வடமதுரை பகுதியில் நேற்றுகூட கரண்ட் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுக்கிரன்குண்டு என்ற கிராமம் உள்ளது. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு பெரும்பாலும் எல்லாருமே கூலி வேலை பார்ப்பவர்கள்தான்.

சுகாதாரக்கேடு
இவர்களின் புயலில் குடிசைகள் பறந்து போய், இப்போது ஊரெல்லாம் கொசுக்கள் பறந்தபடியே இருக்கின்றன. சுகாதார சீர்கேடு காரணமாக எல்லாருக்கும் காய்ச்சல் வேறு. மாற்று துணி கூட உடுத்திக்க இல்லை. நல்லா சாப்பிட்டே 10 நாளுக்கு மேல ஆகுது என்கிறார்கள்.

நிவாரணம்
ஆனால் இதைவிட பெரும்பாலான இடங்களில் மக்கள் ஒன்றுசேர்ந்து சொல்லும் குறை என்னவென்றால், புயல் தொடர்பான உரிய கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதுதான். ஏனென்றால், கணக்கெடுப்பு சரியாக இருந்தால் உரிய நிவாரணம் கைக்கு வந்து சேரும்.

உணவு பொருட்கள்
இதனால்தான் மக்கள் இந்த கோரிக்கையை பலமாக முன் வைத்துள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே மரங்களை வெட்டி போட்டு மறியலும் செய்து வருகிறார்கள். சில இடங்களில் லாரிகளில் வரும் உணவு பொருட்களும் நேரத்துக்கு வந்து சேரவில்லை என்றும் சொல்லி வருத்தப்படுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications