டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய பெண்கள்! புதுக்கோட்டையில் இரவில் பதற்றம்.. இளைஞர் கொலையால் கோபம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளில் நின்ற 25 வயது நிரம்பிய இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் டாஸ்மாக் கடை மீது கல், கட்டைகளை வீசி சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேஷன் (வயது 25). இவர் மரம் வெட்டும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று இரவு முருகேஷன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் முருகேஷன் ரத்தம் சொட்ட சொட்ட சரிந்து விழுந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து வேகமாக இடத்தை காலி செய்தனர்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த முருகேஷனை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேஷன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முருகேஷன் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்தவுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் ஒரு தரப்பினர் கொலை நடந்த டாஸ்மாக் கடை அருகே கூடினர். அங்கு அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முருகேஷனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த வேளையில் சில பெண்கள் கோபத்தின் உச்சிக்கு சென்றனர். முருகேஷன் கொலைக்கு அங்கள்ள டாஸ்மாக் கடை தான் காரணம். அங்கு மதுபானம் குடித்து வந்தவர்கள் தான் முருகேசை கொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டினர். அப்போது சில பெண்கள் டாஸ்மாக் கடைக்கு சென்றனர். இரவு 10 மணியை தாண்டிய நிலையில் டாஸ்மாக் அடைக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும் விடாத பெண்கள் அங்கிருந்த கல், கட்டைகளை எடுத்து டாஸ்மாக் கடை மீது வீசினர். அதோடு டாஸ்மாக் கடையை சுற்றி தகரத்தால் அமைக்கப்பட்ட வேலியை அவர்கள் அசைத்து பெயர்த்து எடுத்தனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்களை சாமதானம் செய்தனர். கொலை செய்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இருப்பினும் அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எஸ்பி பேச்சுவார்த்தை நடத்த விரைந்துள்ளார். அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications