நல்ல செய்தி.. இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் கருவி ரெடி... விலை ரூ. 80000, சூப்பர் தகவல்
புனே: இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கி உள்ளது. இந்த கருவியின் விலை ரூ.80000 ஆகும்., ஒரு கருவியில் 100 பேரை சோதிக்க முடியும்.
மாலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 511 பேருக்கு பரவி உள்ளது. 10 பேர் இதுவரை இறந்துள்ளார்கள். இந்த வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அத்துடன் மக்களிடையே சமூக விலக்கியிருத்தலை உருவாக்குவதற்காக 144 தடை உத்தரவினை பெரும்பாலான மாநில அரசுகள் பிறப்பித்துள்ளன.

கொரானா பரவல்
தற்போதைய நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அளவில் தான் பரவி வருகிறது.விதி விலக்காக சில இடங்களில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் அதாவது மூன்றாவது ஸ்டேஜில் கொரோனா பரவி வருகிறது. இந்த நிலை நாடு முழுவதும் ஏற்படுவதை தடுக்க மிகப்பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறைவான மையங்கள்
மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அனைவருக்கும் அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் குறைந்த அளவே நாடு முழுவதும்உள்ளன. இதேபோல் கொரோனாவைரஸ் பரிசோதனை கருவிகளும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் முடிவுகளை அறிவதற்கு காலதாமதங்கள் ஏற்பட்டு வருகிறது.

புனேவில் கொரோனா கருவி
இந்நிலையில் கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை இந்தியாவிலேயே உருவாக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்ட மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கொரோனா வைரஸ் (கோவிட் 19) பரிசோதனை கருவியை தற்போது உருவாக்கி உள்ளது.

100 பேரை சோதிக்கலாம்
இந்த கோவிட் 19 சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அண்மையில் அனுமதி அளித்தது. அந்த கருவியின் விலை ரூ.80000 ஆகும். ஒரு சிங்கிள் கருவியின் மூலம் 100 நோயாளிகளை சோதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் விஞ்ஞானி ரஞ்சித் தேசாய் கூறுகைகயில், "ஒரு வாரத்தில் 1 முதல் 1.5 லட்சம் சோதனைகளை நாம் தயாரிக்க முடியும், பொதுமக்களுக்காக எங்கள் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்கிறோம். இந்த கருவிகள் இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் விற்கப்படும் விலையில் கால் பங்கு என்றார்.
|
வெளிநாட்டு கருவிகள்
அதாவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை கருவி 3,20,000 என்று விற்கப்படும் நிலையில் இந்த கருவியின் விலைவெறும் 80000 மட்டுமே. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் மற்றும் கண்காணிப்பில் உள்ள அத்தனை பேரையும் சோதிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசுகள் உள்ளன. எனவே நிறைய கருவிகளும், சோதனை மையங்களும் இப்போதைக்கு கொரோனா பரவலை தடுக்க முதல் தேவையாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications