பூனை, நாய்கள் கொல்லப்படுவது பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம்; எங்கு தெரியுமா?
தெருநாய்களைக் கொலை செய்பவர்களைப் பற்றி துப்பு தந்தால் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
புனே: பூனைகள் மற்றும் தெருநாய்கள் கொல்லப்படுவது தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என மகாராஷ்டிர பிரபல பிராணிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்துக்கு உட்பட்ட எர்ரவாடா பகுதியில் கடந்த மாதத்தில் மட்டும் 14 பூனைகளும், 7 நாய்களும் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டன. செல்லப்பிராணிகளாக அல்லாமல், தெருவில் சுற்றித் திரிந்ததால் அவைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது.

ஆனால், அவற்றை யார் கொன்றது என்பது பற்றி தெரியவில்லை. இதனால், அம்மாநில பிரபல பிராணிகள் நலச் சங்கமான 'ஹியூமேன் சொசைட்டி’ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெருநாய்கள் மற்றும் பூனைகள் கொல்லப்படுவது பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் அளிப்பதற்காக, 8899117773 என்ற கைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து தெருவில் சுற்றும் நாய்கள் மற்றும் பூனைகளைக் கொல்லும் நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
More From
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications