பூனை, நாய்கள் கொல்லப்படுவது பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம்; எங்கு தெரியுமா?

தெருநாய்களைக் கொலை செய்பவர்களைப் பற்றி துப்பு தந்தால் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

புனே: பூனைகள் மற்றும் தெருநாய்கள் கொல்லப்படுவது தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என மகாராஷ்டிர பிரபல பிராணிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்துக்கு உட்பட்ட எர்ரவாடா பகுதியில் கடந்த மாதத்தில் மட்டும் 14 பூனைகளும், 7 நாய்களும் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டன. செல்லப்பிராணிகளாக அல்லாமல், தெருவில் சுற்றித் திரிந்ததால் அவைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது.

reward announced for info about killing of stray dogs and cats


ஆனால், அவற்றை யார் கொன்றது என்பது பற்றி தெரியவில்லை. இதனால், அம்மாநில பிரபல பிராணிகள் நலச் சங்கமான 'ஹியூமேன் சொசைட்டி’ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெருநாய்கள் மற்றும் பூனைகள் கொல்லப்படுவது பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் அளிப்பதற்காக, 8899117773 என்ற கைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து தெருவில் சுற்றும் நாய்கள் மற்றும் பூனைகளைக் கொல்லும் நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+