இலங்கை பொருளாதார நெருக்கடி - குழந்தைகள் உள்பட மேலும் 8 ஈழத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
இராமநாதபுரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தாக்குப்பிடிக்க முடியாமல், வாழ்வாதாரத்திற்காக 4 குழந்தைகள் உட்பட 8 தமிழர்கள் அகதிகளாக இன்று தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து, இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி, உணவு பற்றாக்குறை போன்ற காரணங்களால், பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த விலைவாசி உயர்வால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அவர்களில் பலர் வாழ வழியின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ளும் வகையில், தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பலர் குடும்பம் குடும்பமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக படகுகளில் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் இரண்டரை மாத கைக்குழந்தையுடன் 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 2 குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் ஒரு படகுமூலம் இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டுள்ளனர். இந்தியா- இலங்கை இடையே உள்ள மூன்றாம் மணல் திட்டு பகுதியில், இலங்கை படகோட்டிகள் அவர்களை இறக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
உணவு குடிநீர் இன்றி நேற்று முழுவதும் மணல் திட்டில் அவர்கள் தவித்து வந்துள்ளனர். தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் அகதிகள் தவித்து வருவதாக கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்று இந்திய கடற்படையினர், 4 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 8 பேர் அகதிகளாக வந்திருப்பதைக் கண்டனர்.
பின்னர், கோபர் கிராப்ட் கப்பல் மூலம் அவர்களை மண்டபம் பகுதிக்கு கடலோர காவல் படையினர் அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் உளவு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களையும் சேர்த்து இதுவரை இலங்கையில் இருந்து 142 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications