சம்பவம் நா இப்புடி இருக்கணும்.. பிர்லியண்ட் மோட்டிவேசன்.. 10ம் வகுப்பு மாணவன் செஞ்சத பாருங்க!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஜஸ்ட் பாஸ் ஆன 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார். இந்த வீடியோவை பார்த்து மாணவனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. தேர்வில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில மாணவர்கள் தேர்ச்சி பெறாத நிலையில் அடுத்த முயற்சியை தொடங்கி உள்ளனர்.

தேர்வில் வெற்றி தோல்வி என்று மாணவர்கள் எண்ணத் தேவையில்லை.சந்தோஷமாக அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டியது அவசியம் என்பதை 10ம் வகுப்பு மாணவன் உணர்த்தி உள்ளான்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நவீன் கரன் என்ற 10ம் வகுப்பு மாணவன் ஆண்டு தேர்வில் மொத்தம் 185 மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழில் 35, ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 35, அறிவியல் 45, சமூக அறிவியல் 35 என எல்லாவற்றிலும் ஜஸ்ட் பாஸ் ஆகி இருந்தார் மாணவர் நவீன் கரன்.
ஆனால் தான் 10ம்வகுப்பு தேர்வில் பாஸ் ஆனதை எண்ணி மிகவும் உற்சாகம் அடைந்தார். அத்துடன் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் கேவ் வெட்டி கொண்டாடினார்கள். கேக்கை நண்பர்கள் உறவினர்களுக்கு ஊட்டிவிட்டு தனது மகிழ்ச்சியை மாணவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வெற்றி யில் என்ன சின்ன வெற்றி..பெரிய வெற்றி.. வாழ்துக்கள் என்று கூறியுள்ளனர். கொண்டாட வேண்டிய வெற்றி என்றும்கூறியுள்ளனர். கண்டிப்பா இந்த பையன் பெரிய தொழில் அதிபரா வருவான் பாருங்க என்று ஒருவரும், சம்பவம் நா இப்புடி இருக்கணும்... என்று மற்றொருவரும் பாராட்டி உள்ளனர். இதுதான் மிக்சிறந்த மோட்டிவேசன் என்றும் கூறியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications