நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம்! பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் விறு விறு!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டு வரும் நாட்டின் முதல் செங்குத்து தூக்குப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகின்றன.
கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய பாம்பன் கடல்பாலம் கட்டுமானப் பணிகளை 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மழை மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக அந்தப் பணிகள் கூடுதலாக ஓராண்டு நடைபெற்றது.
இந்நிலையில் கடல் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியிருப்பதால் இப்போது வேகமெடுத்துள்ளன.

பாம்பன் பாலம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பாலமானது தமிழக சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. வாகனங்கள் செல்ல ஒரு பாலம், ரயில் செல்ல ஒரு பாலம் என கடலுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள அந்த 2 பாலங்களை கண்டு ரசிக்காமல் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் சென்றதே இல்லை. இந்நிலையில் ரயில் வழித் தடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சகத்தால் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

ரூ.279 கோடி ரூபாய்
ரூ.279 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் இந்த ரயில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 2,078 மீட்டர் நீளத்திற்கு 101 தூண்கள் பொருத்தப்பட்டு ரயில் பாலம் கடலுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய பாம்பன் கடல்பாலம் கட்டுமானப் பணிகளை 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கட்டுமானப் பணிகள்
ஆனால் மழை மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக அந்தப் பணிகள் கூடுதலாக ஓராண்டு நடைபெற்றது. ஏற்கனவே உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ரயில் பாலத்தில் அவ்வப்போது விரிசல் விழுவதால் இந்த புதிய பாலம் கட்டும் முடிவை எடுத்தது மத்திய அரசு. கடலுக்கு நடுவில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப்பாலம் அமையவிருப்பது தான் இந்த பாலத்தின் கூடுதல் சிறப்பு.

இணைப்பு பாலம்
ராமநாதபுரத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாலமாக பாம்பன் பாலம் திகழ்கிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வருபவர்களும் பாம்பன் பாலத்தின் மீது வாகனங்களை நிறுதி அங்கு ஒரு செல்ஃபியை கிளிக் செய்யாமல் செல்ல மாட்டார்கள். அந்தளவுக்கு பாம்பன் பாலம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications