நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம்! பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் விறு விறு!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டு வரும் நாட்டின் முதல் செங்குத்து தூக்குப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய பாம்பன் கடல்பாலம் கட்டுமானப் பணிகளை 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மழை மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக அந்தப் பணிகள் கூடுதலாக ஓராண்டு நடைபெற்றது.

இந்நிலையில் கடல் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியிருப்பதால் இப்போது வேகமெடுத்துள்ளன.

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பாலமானது தமிழக சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. வாகனங்கள் செல்ல ஒரு பாலம், ரயில் செல்ல ஒரு பாலம் என கடலுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள அந்த 2 பாலங்களை கண்டு ரசிக்காமல் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் சென்றதே இல்லை. இந்நிலையில் ரயில் வழித் தடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சகத்தால் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

ரூ.279 கோடி ரூபாய்

ரூ.279 கோடி ரூபாய்

ரூ.279 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் இந்த ரயில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 2,078 மீட்டர் நீளத்திற்கு 101 தூண்கள் பொருத்தப்பட்டு ரயில் பாலம் கடலுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய பாம்பன் கடல்பாலம் கட்டுமானப் பணிகளை 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 கட்டுமானப் பணிகள்

கட்டுமானப் பணிகள்

ஆனால் மழை மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக அந்தப் பணிகள் கூடுதலாக ஓராண்டு நடைபெற்றது. ஏற்கனவே உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ரயில் பாலத்தில் அவ்வப்போது விரிசல் விழுவதால் இந்த புதிய பாலம் கட்டும் முடிவை எடுத்தது மத்திய அரசு. கடலுக்கு நடுவில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப்பாலம் அமையவிருப்பது தான் இந்த பாலத்தின் கூடுதல் சிறப்பு.

இணைப்பு பாலம்

இணைப்பு பாலம்

ராமநாதபுரத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாலமாக பாம்பன் பாலம் திகழ்கிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வருபவர்களும் பாம்பன் பாலத்தின் மீது வாகனங்களை நிறுதி அங்கு ஒரு செல்ஃபியை கிளிக் செய்யாமல் செல்ல மாட்டார்கள். அந்தளவுக்கு பாம்பன் பாலம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+