பாம்பன் அருகே நங்கூரமிட்ட புரேவி புயல்.. ராமேஸ்வரத்தில் 12 செ.மீ. மழை பதிவு
ராமநாதபுரம்: புரேவி புயல் மன்னார் பகுதியில் நிலை கொண்டிருப்பதால் ராமேஸ்வரத்தில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இலங்கையின் திருகோணமலை- பருத்தித் துறை இடையே முல்லைத் தீவு அருகே புரேவி புயல் கரையை கடந்தது. இலங்கையில் கரையை கடந்த புரேவி புயல் மன்னார் வளைகுடாவுக்குள் நுழைந்து பாம்பனை நெருங்கவுள்ளது.
இது இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையை கடக்கவுள்ளது. தற்போது பாம்பனிலிருந்து 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.

ராமநாதபுரம்
இந்த புயலால் தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கை அருகே புயல் கரையை கடந்த போது நேற்றைய தினம் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுகை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அது போல் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

பள்ளமோர்குளம்
நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நேற்று ஒரே நாளில் 120 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதாவது ராமநாதபுரத்தில் 33.50 மி.மீ மழையும் மண்டபம் பகுதியில் 58 மி.மீ. மழையும் பள்ளமோர்குளம் பகுதியில் 13 மி.மீ. மழையும் பெய்தது.

ராமநாதபுரம்
பின்னர் தங்கச்சிமடத்தில் 85.மி.மீ. மழையும் ராமேஸ்வரத்தில் 120.20 மி.மீ. மழையும் பாம்பனில் 62 மி.மீ. மழையும் பெய்தது. திருவாடானையில் 34 மி.மீ.மழையும் தொண்டியில் 41.50 மி.மீ. மழையும் பரமக்குடியில் 31.60 மி.மீ. மழையும் கமுதியில் 22.80 மி.மீ. மழையும் என ராமநாதபுரத்தில் மொத்தம் 746.30 மி.மீ. மழை பெய்துள்ளது.

குமரியில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரியாக 46.64 மி.மீம மழை பெய்துள்ளது. அது போல் முதுகுளத்தில் அதிகபட்சமாக 105 மி.மீ. மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியில் சராசரியாக 1.1 மி.மீ மழை பெய்தது. சுருளகோடு பகுதியில் அதிகபட்சமாக 4.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று மதியம் முதல் தென் கடலோர மாவட்டங்களில் புரேவி புயலின் தாக்கம் இருக்கும். அதன் பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நகரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications