‛‛பா ரஞ்சித் சாதிய மோதலை தூண்டுகிறார்’’.. தீபக் ராஜா கொலையால் பரமக்குடி போலீசில் பரபர புகார்
ராமநாதபுரம்: திருநெல்வேலியில் நடந்த தீபக் ராஜா கொலை வழக்கில் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டிவிட முயற்சி செய்வதாக பரமக்குடி டிஎஸ்பியிடம் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தைச் சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகர் உள்ள ஹோட்டலில் வருங்கால மனைவியுடன் சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தீபக் ராஜாவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

தீபக் ராஜாவை அந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்தன. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் தீபக் ராஜா, பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் என்பதும், அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் சாதிய ரீதியிலாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மொத்தம் 6 தனிப்படையை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தீபக் ராஜா கொலை வழக்கு பற்றி ஒரு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
அந்த பதிவில், ‛‛திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால் படுகொலை செய்யப்பட்ட முத்து மனோவின் நண்பர் பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சகோதரர் தீபக் ராஜா பாளையங்கோட்டையில் உணவகத்துக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம்.
சக மனிதனை படுகொலை செய்யும் சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக எஸ்சி, எஸ்டி வ்னகொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வழங்கிட வேண்டும்'' என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த பதிவில் குறிப்பிட்ட இன்னொரு சமுதாயத்தின் பெயர் சேர்க்கப்பட்டு அவர்களை சாதிவெறி பிடித்த குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பதிவுக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் இயக்குனர் பா ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதனிடம் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ‛‛இயக்குனர் பா ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டிவிட முயற்சிக்கிறார். திருநெல்வேலயில் தீபக் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை கூறி குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதனால் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications