‛‛பா ரஞ்சித் சாதிய மோதலை தூண்டுகிறார்’’.. தீபக் ராஜா கொலையால் பரமக்குடி போலீசில் பரபர புகார்
ராமநாதபுரம்: திருநெல்வேலியில் நடந்த தீபக் ராஜா கொலை வழக்கில் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டிவிட முயற்சி செய்வதாக பரமக்குடி டிஎஸ்பியிடம் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தைச் சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகர் உள்ள ஹோட்டலில் வருங்கால மனைவியுடன் சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தீபக் ராஜாவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

தீபக் ராஜாவை அந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்தன. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் தீபக் ராஜா, பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் என்பதும், அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் சாதிய ரீதியிலாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மொத்தம் 6 தனிப்படையை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தீபக் ராஜா கொலை வழக்கு பற்றி ஒரு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
அந்த பதிவில், ‛‛திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால் படுகொலை செய்யப்பட்ட முத்து மனோவின் நண்பர் பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சகோதரர் தீபக் ராஜா பாளையங்கோட்டையில் உணவகத்துக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம்.
சக மனிதனை படுகொலை செய்யும் சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக எஸ்சி, எஸ்டி வ்னகொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வழங்கிட வேண்டும்'' என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த பதிவில் குறிப்பிட்ட இன்னொரு சமுதாயத்தின் பெயர் சேர்க்கப்பட்டு அவர்களை சாதிவெறி பிடித்த குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பதிவுக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் இயக்குனர் பா ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதனிடம் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ‛‛இயக்குனர் பா ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டிவிட முயற்சிக்கிறார். திருநெல்வேலயில் தீபக் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை கூறி குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதனால் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications