Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரம் பாம்பனில் மீனவர்கள் திடீர் போராட்டம்.. கடலில் குதிக்க முயன்ற மீனவ பெண்களால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் பாம்பன் பகுதியில் மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பனில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் திடீரென கடலில் இறங்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் பெரும் இன்னலை சந்திக்க வேண்டியுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது, மீன் பிடி பொருட்களை சேதப்படுத்துவது என அடிக்கடி அட்டூழியத்தில் இலங்கை கடற்படை ஈடுபடுகிறது.

fishermen protest ramanathapuram police

இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு, தமிழக அரசு முன்வைத்து வருகிறது. எனினும், இதுவரை உறுதியான ஒரு தீர்வு எட்டியபாடில்லை. நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்றும் தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்தான் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ராமநாதபுரத்தில் மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாம்பன் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மீனவ பெண்களும் பங்கேற்றனர். போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் மற்றும் அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் வாகனங்கள் மண்டபம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. போரட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே, போராட்டத்தின் போது சில பெண்கள் கடலில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலுக்குள் சென்ற மீனவ பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தின் போது திடீரென பெண்கள் கடலில் குதிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட கண்காணிப்பாளர், உங்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய அரசின் வாயிலாக இலங்கைக்கு கோரிக்கை வைத்து உடனடியாக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்டு விசைப்படகு மீனவர்கள் கலைந்து சென்றனர்.

எனினும், மூன்று மாதங்களுக்கு முன்பாக சிறை பிடிக்கப்பட்டு இலங்கை புத்தளம் சிறையில் இருக்கக்கூடிய நாட்டு படகு மீனவர்களின் உறவினர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இருப்பினும் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கிருந்து புறப்பட்டனர். அப்போதுதான் , மீனவர்களின் உறவினர் சிலர் பாம்பன் பாலத்திற்கு அடியில் கடலுக்குள் இறங்க முயற்சித்னர். இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+