கள்ளக்காதல் விபரீதம்.. இரண்டு பேர் தந்த டார்ச்சர்.. ராமநாதபுரத்தில் இளம் பெண் எடுத்த ஷாக் முடிவு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தொடர்ந்து தெரியாமல் கள்ள உறவில் இருந்ததை அப்பகுதியில் இருந்த இருவர் தெரிந்து கொண்டு மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது.

ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 20). இவருக்கும் பரமக்குடி அருகே செல்லூர் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது

இந்த நிலையில் ரேஷ்மாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தென்னரசு என்பவருக்கும் கள்ள உறவு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இரவு நேரத்தில் விமல்ராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில் தென்னரசு, ரேஷ்மாவுடன் தனிமையில் இருந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஒருநாள் இரவு ரேஷ்மாவை சந்தித்து விட்டு தென்னரசு சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளாராம்.அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாரும், பாலமுருகனும் பார்த்துள்ளனர்.

கணவன் கோபம்

கணவன் கோபம்

இந்த நிலையில், முத்துக்குமார், பாலமுருகன், ஆகியோர் விமல்ராஜுடன் ஒருநாள் மது அருந்திக் கொண்டிருந்த போது தென்னரசு சுவர் ஏறிக்குதித்து சென்றது குறித்து கூறியுள்ளனர். மதுபோதையில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற விமல்ராஜ் தனது மனைவி ரேஷ்மாவை கடுமையாக அடித்து உதைத்து உள்ளார்.

தற்கொலை செய்வேன்

தற்கொலை செய்வேன்

இதையடுத்து ரேஷ்மா, முத்துக்குமாரையும், பாலமுருகனையும் செல்போனில் தொடர்பு கொண்டு, தென்னரசு குறித்து எதற்காக தனது கணவரிடம் கூறினீர்கள் என கேள்வி எழுப்பி இருக்கிறார். அவர்கள் இருவரின் பெயரையும் எழுதி வைத்துவிட்டு தான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினாராம்,.

ரேஷ்மா கடிதம்

ரேஷ்மா கடிதம்

இந்நிலையில் தனது கள்ளக்காதல், கணவனுக்கு தெரிந்தை எண்ணி மனம் உடைந்த ரேஷ்மா கடந்த 5ம்தேதி வீட்டில் தனிமையில் இருந்தபோது தன் குழந்தையின் தொட்டில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். முன்னதாக தனது தற்கொலைக்கு பாலமுருகனும், முத்துகுமாரும் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ரேஷ்மா தற்கொலை செய்திருக்கிறார்.

ராமநாதபரத்தில் அதிர்ச்சி

ராமநாதபரத்தில் அதிர்ச்சி

திருமணமாகி நான்கு ஆண்டுகள் தான் ஆகிறது என்பதால், பரமகுடி உட்கோட்ட கோட்டாட்சியர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதன்பின்னர் ரேஷ்மாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார், பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தகாத உறவால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+