வழுதூர் ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா! ஃபாஸிஸவாதிகளை தனிமைப்படுத்த இதுவே வழி! தமிமுன் அன்சாரி யோசனை!
ராமநாதபுரம்: ஃபாஸிஸவாதிகளை தனிமைப்படுத்த சிறுபான்மையினர் மட்டும் கை கோர்த்தால் முடியாது என்றும், பெரும்பான்மையினரின் உள்ளங்களை வென்றெடுத்து அவர்களையும் இப்பணியில் இணைக்க வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

வழுதூர் பள்ளிவாசல்
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைப்பெற்றது. சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் எல்லா சமூகத்தினரும் வரவேற்பு பேனர்களை வைத்து தங்கள் அன்பையும் வரவேற்பையும் வெளிக்காட்டியிருந்தனர். அதுபோல் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் பிரமுகர்கள் வந்திருந்ததால், கட்சியினரும் தனித் தனியாக பதாகைகள் வைத்திருந்தனர்.

ரூ.8 லட்சம் ஊதியம்
வழுதூர் ஜும்ஆ பள்ளிவாசலை வடிவமைத்த பொறியாளர் பால் பாண்டியனுக்கு 8 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில், அதனை அவர் மீண்டும் அந்தப் பள்ளிவாசலுக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார். இதனிடையே இந்நிகழ்வில் பங்கேற்ற மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, இணக்கமான நிகழ்வுகளை அதிகப்படுத்த வேண்டும் எனப் பேசினார்.

இஃப்தார் விருந்து
மேலும் வழுதூர் ஜும் ஆ பள்ள்வாசலில் ரமலான் நேரங்களில் எல்லா சமூக மக்களையும் அழைத்து இஃப்தார் விருந்து அளிக்க வேண்டும் என்றும், மற்ற மாதங்களில் பள்ளியில் நடைபெறும் தொழுகை முறைகளை பல்வேறு சமூக மக்களையும் அழைத்து விளக்க வேண்டும் என்றும் அது புரிதலுக்கு வழி வகுக்கும் என்றும் பேசினார்.

ஃபாஸிஸவாதிகள்
இணக்கமான நிகழ்வுகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், ஃபாஸிஸவாதிகளை தனிமைப்படுத்த சிறுபான்மையினர் மட்டுமே கைக்கோர்ப்பது சாத்தியமல்ல என்றும், பெரும்பான்மையினரின் உள்ளங்களையும் வென்றெடுத்து அவர்களையும் இப்பணியில் இணைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார். மேலும், மதவெறி எந்த தரப்பிலிருந்து வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்றும், அது தான் நீதி என்றும் பேசினார்.

முக்கியப் பிரமுகர்கள்
இந்நிகழ்வில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மைதீன், நவாஸ் கனி MP, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications