மதுரை டூ பரமக்குடி... நள்ளிரவில் பைக்கில் லாங் டிரைவ் வந்த புதுமண தம்பதி.. இப்படியா ஆகணும்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிச்சேரி புத்தூரைச் சேர்ந்த மதன் மற்றும் சங்கீதாவுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. மதன், உடற்பயிற்சி கூடம் ஒன்றை பரமக்குடியில் நடத்தி வருகிறார். பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி நான்கு வழிச்சாலையில் புதுமணத்தம்பதி பைக்கில் சென்றனர். நள்ளிரவில் பாலத்தில் சென்ற போது, தடுப்பு சுவர் புதுப்பெண்ணுக்கு எமனாக மாறி உள்ளது. கணவர் காயம் அடைந்தார்.
இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் பயணிக்கும் போது மிக கவனமாக செல்ல வேண்டும். முடிந்தால் நள்ளிரவு வேளையில் நீண்ட தூரங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை தவிர்ப்பது கூட நல்லது. 100 கிமீ தூரம் , 200 கி மீ தூரம் பைக்கில் நள்ளிரவில் பயணிப்பது நல்லது. ஏனெனில் சிறு கவனக்குறைவும் பெரிய விபத்திற்கு காரணமாகிவிடும்.

சிலருக்கு அந்த சாலை புதிதாக இருக்கும். வேகமாக வரும் போது பள்ளம் இருப்பது தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் எதிரே வரும் வாகனங்களும் பள்ளத்தை தெரியாமல் கட்டுப்பாடு இல்லாமல் மோதுவது போல் வரலாம். எனவே சாலையில் கவனமாக செல்ல வேண்டும். பரமக்குடி அருகே புதுமண தம்பதிக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிச்சேரி புத்தூரைச் சேர்ந்த 30 வயதாகும் மதன் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதாவுக்கு 27 வயது ஆகிறது. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
உடல் எடை குறைப்பு பயிற்சிக்கூடம் நடத்துகிறவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் மதுரையில் நடந்தது. அதில் மதன் - சங்கீதா தம்பதியினர் கலந்து கொண்டு விளையாடியிருக்கிறார்கள். போட்டி முடிந்து மதுரையில் இருந்து பரமக்குடிக்கு இரவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்கள். நள்ளிரவில் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி நான்கு வழிச்சாலையில் சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இருக்கிறது. சாலையோர ஒரு பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன், மனைவி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். மோட்டார் சைக்கிள் மட்டும் பாலத்தில் கிடந்திருக்கிறது.
பள்ளத்தில் விழுந்ததில் சங்கீதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதனுக்கு கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இது பற்றி பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் கணவருடன் சென்றபோது விபத்து ஏற்பட்டு, புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பரமக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications