Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்.. பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலி.. போலீஸ் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது 68-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி இன்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதையொட்டி 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சந்தீஸ் நேற்று செய்தியாளா்களிடம் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்திருக்கிறது. இங்கு நாளை (இன்று) அஞ்சலி செலுத்த வருவோருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் 24 மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், 32 ஏ.டி.எஸ்.பிக்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்பட 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 38 சோதனைச் சாவடிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கிறது.

Immanuel Paramakudi

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க நவீன கேமரா பொருத்தப்பட்ட 2 'ட்ரோன்'கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. பதற்றமான இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களும், கூடுதல் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்

நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்திலோ, திறந்தவெளி வாகனத்திலோ வரக்கூடாது. அஞ்சலி செலுத்த வருவோா் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். அரசியல் கட்சியினா், சமுதாயத் தலைவா்களுக்கு நினைவிடம் வந்து செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இமானுவேல் சேகரன் நினைவிடம் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று அந்தப் பகுதியில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறது. பரமக்குடி பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா் தங்க வைக்கப்பட்டனா். இதனால் நேற்றும் இன்றும், பரமக்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+