ராமநாதபுரத்தில் புதிய மருத்துவ கல்லூரி: அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார்,
ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா பட்டினம் காத்தான் அம்மா பூங்கா அருகே இன்று காலை நடந்தது. இந்த விழாவிற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்தறை அமைச்ர் ஹர்ஷ்வர்தன் தலைமை வகித்தார். தமிழக துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான அடிக்கலை நாட்டினார். பின்னர் புதிய திட்டங்களுக்கான பணிகளையும் தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
என்னாது கட்சியினரா?.. பாமகவில் 5 அல்லது 10 பேர்தான் உள்ளார்கள்?.. ராமதாஸை விமர்சித்த திமுக எம்பி
புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1650 மருத்துவ படிப்பு இடங்கள் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைத்துள்ளது. அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது.
ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கச்சத் தீவை மீட்க எங்கள் அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறது என்றார்.