பாம்பனில் சூறைக்காற்று.. பாதியில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்! பயணிகள் அச்சம்
ராமநாதபுரம்: இலங்கையை ஒட்டி, வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க இருக்கிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் பயணிகள் ரயில் பாம்பனில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஜனவரி மாதத்தில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாவது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறான விஷயம். அந்த வகையில் இந்த ஆண்டு புயல் சின்னம் உருவாகியிருந்தது. இது இன்று மாலைக்குள் இலங்கையில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக அயோத்தியிலிருந்து, ராமேஸ்வரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் பாம்பன் பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. காற்றின் வேகம் குறைந்த பின்னர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications