Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா திருத்தம்.. ஆவணத்தில் இத்துனூண்டு புள்ளி.. இதுக்கு போயி? ராமநாதபுரத்தில் விழித்த அரசு ஊழியர்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் லஞ்ச சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அடிக்கடி கைதாகி வருகிறார்கள். கைதான நபர்களுக்கு நீதிமன்றங்களில் தண்டனைகளும், தரப்பட்டு வருகின்றன. எனினும், கைது நடவடிக்கைகள் லஞ்சத்தின் பேரில் பெருகியபடியே உள்ளது. இதோ ராமநாதபுரத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ளது சூரன்கோட்டை.. இங்கு வசித்து வருபவர் விஸ்வநாதன்.. இவருக்கு 30 வயதாகிறது.. இவருக்கு, தன்னுடைய அம்மா காமாட்சி பெயரிலுள்ள கம்ப்யூட்டர் பட்டாவில், ஒரு புள்ளியை மட்டும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது.

Patta correction patta change Ramnad

லஞ்ச ஒழிப்புத்துறை

இதற்காக ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளரான முகமதுதிலீப் 47, என்பரை அணுகினார். அதற்கு முகமது திலீப், ரூ.1000 லஞ்சம் கேட்டாராம்.. இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விஸ்வநாதன் புகார் செய்தார்.. பிறகு, 2015 மார்ச் 18ம்தேதி போலீசார் ரசாயனம் தடவிய 1000 ரூபாயை வழங்கினர். இதனை விஸ்வநாதன் முகமது திலீப்பிடம் கொடுத்தபோது கையும் களவுமாக போலீசார் அவரை கைது செய்தனர்.

அசிங்கமா போச்சு

இதற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், முகமது திலீப்புக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோகன்ராம் தற்போது தீர்ப்பளித்துள்ளார்.. இந்த அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க தற்போது உத்தரவிட்டுள்ளார்..

இப்போது முகமது திலீப் ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.. 1000 ரூபாய் லஞ்சம் கேட்டு, வேலையை இழந்து, 4 வருடம் சிறைக்கும் செல்ல நேரிட்டுள்ளது..!!

சிக்கிய விஏஓ உதவியாளர்

கடந்த வாரம் திருவாரூர் மாவட்டத்திலும் இதுபோலவே ஒரு தண்டனை வழங்கப்பட்டது.. அதாவது, புலிவலம் பகுதியை சேர்ந்த அருள்தரண், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக 2015ம் ஆண்டில் புலிவலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது, விஏஓ -வின் உதவியாளராக பழனிவேல் என்பவர், வாரிசு சான்றிதழ் கேட்டதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்..

Patta correction patta change Ramnad

அவ்வளவு பணம் இல்லாததால், ரூ.500-ஐ மட்டும் அட்வான்ஸாக பழனிவேலிடம் தந்த அருள்தரண், மிச்ச பணத்தை மறுநாள் தருவாக சொல்லியுள்ளார். ஆனால், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் தந்ததன் பேரில், பழனிவேல் கைதானார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்சம் வாங்கிய பழனிவேலுக்கு 4 வருடங்கள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.. இதுபோன்ற தண்டனை உத்தரவுகள், வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் மிகுந்த அதிர்வலையை உண்டுபண்ணி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+