Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமநாதபுரத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரரின் மனைவி.. குழந்தைகள் கண் முன்னே.. ஆடிப்போன மக்கள்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் விஜயகோபால் என்பவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆவார். விஜயகோபால் உத்தரகாண்ட் மாநிலத்தில் இப்போது பணியில் இருக்கிறார். இவரது மனைவி ஜெர்னி. ஜெர்னியின் வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி ஒரு கும்பல் புகுந்தது. அங்கு மகன், மகள் கண் முன்னே நடந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தையே ஆடிப்போக வைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் பிறந்தவர் 38 வயதாகும் விஜயகோபால். இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். விஜயகோபால் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பில் பணியாற்றி வருகிறார். இவரது அத்தை மகள் ஜெர்மினி சென்னையில் வசித்து வந்தார். இவருக்கு தற்போது 36 வயது ஆகிறது. ஜெர்மினிக்கு விஜயகோபாலுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நிவேதா பெத்தனாட்சி (14) என்ற மகளும், திஸ்வர் (10) என்ற மகனும் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

Ramanathapuram What did the masked man do when he entered Indian Army man house in Sayalgudi

விவாகரத்து வழக்கு

கன்னிராஜபுரத்தை அடுத்த வெட்டுக்காடு பகுதியில் விஜயகோபால் தன் மனைவி ஜெர்மின் பெயரில் நிலம் வாங்கி வீடு கட்டியிருக்கிறார்கள். அதில் தான் விஜயகோபால் தனது மனைவி ஜெர்மின் மற்றும் தனது குழந்தைகளும் வசித்து வருகிறார். இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் விஜயகோபாலுக்கும் ஜெர்மின் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடலாடி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர். மகன், மகளுக்காக விஜயகோபால், மாதந்தோறும் பராமரிப்பு தொகை வழங்கி வந்ததாகவும், கடந்த 6 மாதமாக அந்த பணம் வழங்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

கையில் ஆயுதங்கள்

நேற்று முன்தினம் இரவு தனது பிள்ளைகளுடன் ஜெர்மின், வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி ஒரு கும்பல் திடீரென புகுந்தது. கையில் பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தார்களாம். இதனால் ஜெர்மின் மற்றும் 2 குழந்தைகளும் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

கூலிப்படை

தொடர்ந்து முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறார்கள். கூலிப்படையினர் யாரோ ஏவியதன் அடிப்படையில் ஜெர்மினை கொன்றதாக சாயல்குடி போலீசார் சந்தேக்கிறார்கள். இதுதொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அவருடைய கணவர் விஜயகோபாலை போலீசார் விசாரித்தனர். அவர் தற்போது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருப்பதாக போலீசாரிடம் கூறி உள்ளார். அவர் வந்ததும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். மகன், மகள் கண்முன்னே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+