சவுதி அரேபியாவிலிருந்து மகனை மீட்க உதவுங்கள்.. ராமநாதபுரம் கலெக்டரிடம் பெண் மனு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகேயுள்ள, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனை சவுதி அரேபியாவிலிருந்து மீட்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கஹலோனிடம் வாராந்திர குறைதீர்க்கும் நாளில் மனு அளித்தார்.

மனுதாரர் சாந்தி சகாயம் இதுபற்றி கூறுகையில், தனது மகன் நிர்மல் (33), 2022 ஆம் ஆண்டு மீன்பிடி கப்பல் குழு விசாவில் வேலைக்காக சவுதி அரேபியா சென்றதாகவும், அவர் 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் கடற்படையால் கைது செய்யப்பட்டதாக குடும்பத்திற்குத் தகவல் கிடைத்ததாகவும், இதையடுத்து தனது மகனை சவுதி அரேபியாவில் வேலைக்கு அனுப்பி வைத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீபக்கைத் தொடர்பு கொண்டு தங்கள் மகனை மீட்க உதவி கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

saudi arabia ramanathapuram

சாந்தி சகாயம் மேலும் கூறுகையில், "எனது மகனுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது, அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார், நடக்கக்கூட முடியவில்லை. அங்கு சிகிச்சை பெற போதுமான பணம் இல்லாததால், அவர் மருத்துவ சிகிச்சை இல்லாத ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டார்" என்றார்.

தீபக்கிடம் தங்கள் மகனை திரும்ப அழைத்துவர ஏற்பாடு செய்ய கோரிக்கை வைத்தபோது, அதிக பணம் கேட்டு இந்த கோரிக்கையை மறுத்துவிட்டார். வேலை ஏற்பாடு செய்யப் பணம் கொடுத்திருந்தோம். ஆனால் சூழ்நிலையைப் பயன்படுத்தி, தீபக் இப்போது, எங்கள் குடும்பத்திடமிருந்து பணம் பறிக்க முயற்சிக்கிறார். இவ்வாறு சாந்தி சகாயம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+