கொத்தனார் மனைவி ஈஸ்வரி போட்ட மாஸ்டர் பிளானா? மோப்பம் பிடித்த ராமநாதபுரம் போலீஸ்.. பரிதாப கணவர்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இவருடன் சேர்த்து மேலும் 2 பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்றொரு நபரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த மாவட்டத்தில் பலருக்கும் அதிர்ச்சியை தந்துவருகிறது.
ராமநாதபுரம் அருகே கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வட மாநில இளைஞரை தேடி வருகின்றனர்.

பெண் குழந்தைகள்: ராமநாதபுரம் அருகே அழகன்குளம் சாமித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.. 45 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் கோட்டை ஈஸ்வரி.. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. ஈஸ்வரிக்கு இப்போது 41 வயதாகிறது..
லட்சுமணன் கொத்தனாராகவும், கோட்டை ஈஸ்வரி, ஆற்றங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் இறால் பண்ணையிலும் வேலை செய்து வருகிறார்கள்.. இந்நிலையில், இறால் பண்ணையில், பணிபுரியும் சக்திகுமார் பிஜி என்ற 31 வயது நபருடன் ஈஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. ஒடிசா மாநிலம் சோனைப்பூர் பகுதியை சேர்ந்தவர் இந்த சக்திகுமார் பிஜி.
நெருக்கம்: நாளுக்கு நாள் இவர்களது நெருக்கம் அதிகரித்ததையடுத்து, வீட்டிலுள்ள நகைகளை, சக்திகுமார் பிஜிக்கு ஒவ்வொன்றாக தர ஆரம்பித்துள்ளார் ஈஸ்வரி.. நகை மட்டுமல்லாமல், பணத்தையும் கடந்த சில மாதங்களாகவே தந்திருக்கிறார். வீட்டிலுள்ள நகை, பணம், ஒவ்வொன்றாக காணாமல் போவது குறித்து லட்சுமணக்கு சந்தேகம் எழுந்துள்ளது.. அப்போதுதான், மனைவியின் தவறான உறவும் தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கேட்டதற்கு, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கோட்டை ஈஸ்வரி, சக்திகுமார் பிஜியுடன் சேர்ந்து, கணவனை கொன்றுவிடுவது என்று முடிவெடுத்தார்.. இதற்காக தொண்டி பகுதியை சேர்ந்த பிரதீபன்(30), கவுதம் (34) ஆகிய 2 பேருக்கும் பணம் தந்து, லட்சுமணனை கொலை செய்ய சொன்னார்..
அதிரடி கைது: இதையடுத்து, திட்டமிட்டபடியே லட்சுமணனை கொல்ல அவர்களும் முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துவிட்டது.. இதனால், விரைந்து வந்து, கோட்டை ஈஸ்வரி, பிரதீபன், கவுதம் ஆகிய 3 பேரையுமே கைது செய்தனர்.. ஆனால், வடமாநில இளைஞரான சக்திகுமார் பிஜி தலைமறைவாகிவிட்டாராம்.. அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications