Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரம் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை.. மீனவர்களுக்கு பரிசு தர அரசு முடிவு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இன்று மீனவர்கள் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மீனவர்கள் வலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினமான சித்தாமை ஒன்று வாயில் இரும்பு தூண்டில் மாற்றியவாறு உயிருடன் சிக்கியது. அந்த கடல் ஆமையை உயிருடன் மீட்டு பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அரியவகை கடல்வாழ் உயிரினமான சித்தாமை (Olive Ridley Sea Turtle) உலகிலேயே மிகவும் சிறிய, மற்றும் அதிகம் காணப்படும் கடல் ஆமைகளில் ஒன்று. இது இந்தியப் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. சித்தாமையின் ஸ்பெஷல் என்னெவென்றால் ஆயிரக்கணக்கான பெண் ஆமைகள் ஒரே நேரத்தில் கடற்கரையில் கூடி முட்டையிடும். இந்தியாவை பொறுத்தவரை ஒடிசா மாநிலத்தின் கஹிர்மாதா கடற்பகுதி உலகிலேயே சித்தாமைகள் முட்டையிடும் முக்கிய இடங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டிலும் இவை உள்ளன.

Rare sea turtle caught in Rameswaram net Government decides to reward fishermen

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன், உச்சிப்புளி, சேராங்கோட்டை, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இன்று மீனவர்கள் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மீனவர்கள் வலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினமான சித்தாமை ஒன்று வாயில் இரும்பு தூண்டில் மாற்றியவாறு உயிருடன் சிக்கியது.

இதனை அறிந்த மீனவர்கள் வலையில் இருந்த பிற மீன்களை பிரித்து எடுத்து விட்டு வாயில் இரும்பு தூண்டிலுடன் உயிருடன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆமையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக கடலில் உயிருடன் பாதுகாப்பாக விட்டனர்.

ஆமையின் வாயில் சிக்கிய இரும்பு தூண்டில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக தூண்டிலில் மீனை மாட்டி கடலில் போட்ட போது அது ஆமையின் வாயில் சிக்கி நீண்ட நாட்களாக ஆமை அவதிப்பட்டு வந்திருக்காலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

கடலில் பாதுகாப்பாக விடப்பட்டதை அப்பகுதி மீனவர்கள் வீடியோ எடுத்து 'மீன் பிடி வலைகளில் சிக்கும் ஆமைகளை மீண்டும் பத்திரமாக கடலில் விட வேண்டும்' என விழிப்புணர்வு வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

இந்த வீடியோ தற்போது அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. தமிழக அரசின் வனத்துறை சார்பில் அழிவின் விளிம்பில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை பத்திரமாக மீட்டு கடலில் விடும் மீனவர்களுக்கு வழங்கும் பரிசுத் தொகையை மீனவர்களுக்கு வழங்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+