கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்! ரூ.350 கோடி திட்ட மதிப்பில் தனுஷ்கோடியில் ஆராய்ச்சி மையம்!
ராமநாதபுரம்: கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது பற்றி ஆராய ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் ரூ.350 கோடி திட்ட மதிப்பில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்கனவே தமிழகம் முன்னணியில் உள்ள நிலையில் இப்போது முன்னெடுக்கப்படும் இந்த புதிய முயற்சி பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே தமிழகம் மற்றும் குஜராத்தில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுவதாக தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குநர் பலராமன் கண்ணன் கூறியிருக்கிறார்.

காற்றாலை மின்சாரம்
தமிழகத்தில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான ஆராய்ச்சி மையம் அமைக்க ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 75 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. அங்கு ஆராய்ச்சி மையத்தை நிறுவி, கடலில் தலா 8 மெகாவாட் திறனுடைய இரண்டு காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி பரிசோதிக்கப்படவுள்ளன. இந்த புதிய முயற்சி வெற்றிபெற்றால் கடலில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசுடன்
இதனிடையே தனுஷ்கோடி கடலில் சோதனை முயற்சியாக பரிசோதிக்கப்படும் காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை தமிழக அரசுக்கு விற்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையும், ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெறும் காற்றாலை மின் உற்பத்தி மூலம் ஏற்கனவே தமிழகம் முன்னணியில் இருப்பது கவனிக்கத்தக்கது.

தேசிய காற்று சக்தி
இதனிடையே இது தொடர்பாக தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குநர் பலராமன் கண்ணன் கூறுகையில், ''தமிழகம் மற்றும் குஜராத்தில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இரண்டு மாநிலங்களிலும் உள்ள கடல்களில் 2030-ம் ஆண்டு இறுதிக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.''

டெல்லியில் மாநாடு
காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் விண்ட் எனர்ஜி மாநாடு ஒன்று நடைபெறவிருக்கிறது. இந்த மாநாடு மூலம் காற்றாலை மின் உற்பத்தி துறையில் உலக முதலீடை இந்தியா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications