கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்! ரூ.350 கோடி திட்ட மதிப்பில் தனுஷ்கோடியில் ஆராய்ச்சி மையம்!
ராமநாதபுரம்: கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது பற்றி ஆராய ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் ரூ.350 கோடி திட்ட மதிப்பில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்கனவே தமிழகம் முன்னணியில் உள்ள நிலையில் இப்போது முன்னெடுக்கப்படும் இந்த புதிய முயற்சி பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே தமிழகம் மற்றும் குஜராத்தில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுவதாக தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குநர் பலராமன் கண்ணன் கூறியிருக்கிறார்.

காற்றாலை மின்சாரம்
தமிழகத்தில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான ஆராய்ச்சி மையம் அமைக்க ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 75 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. அங்கு ஆராய்ச்சி மையத்தை நிறுவி, கடலில் தலா 8 மெகாவாட் திறனுடைய இரண்டு காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி பரிசோதிக்கப்படவுள்ளன. இந்த புதிய முயற்சி வெற்றிபெற்றால் கடலில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசுடன்
இதனிடையே தனுஷ்கோடி கடலில் சோதனை முயற்சியாக பரிசோதிக்கப்படும் காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை தமிழக அரசுக்கு விற்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையும், ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெறும் காற்றாலை மின் உற்பத்தி மூலம் ஏற்கனவே தமிழகம் முன்னணியில் இருப்பது கவனிக்கத்தக்கது.

தேசிய காற்று சக்தி
இதனிடையே இது தொடர்பாக தேசிய காற்று சக்தி நிறுவன இயக்குநர் பலராமன் கண்ணன் கூறுகையில், ''தமிழகம் மற்றும் குஜராத்தில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இரண்டு மாநிலங்களிலும் உள்ள கடல்களில் 2030-ம் ஆண்டு இறுதிக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.''

டெல்லியில் மாநாடு
காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் விண்ட் எனர்ஜி மாநாடு ஒன்று நடைபெறவிருக்கிறது. இந்த மாநாடு மூலம் காற்றாலை மின் உற்பத்தி துறையில் உலக முதலீடை இந்தியா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications