Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதத்திற்கு 144 தடை.. 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.. கலெக்டர் ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 9) முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினம் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. அதேபோல சுதந்திர போராட்டத் தலைவர் முத்துராமலிங்க தேவர் அக்டோபர் 30ல் பிறந்து அக்டோபர் 30ல் மறைந்தவர். பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்டோபர் 30ஆம் தேதிஆண்டுதோறும் குருபூஜை நடந்தப்படுவது வழக்கம்.

Section 144 prohibitory order in ramanathapuram district for next 2 months

இந்த இரு நாட்களிலும் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இவர்களது நினைவிடங்களுக்கு வருகை தந்து மரியாதை செலுத்துவார்கள். இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை நிகழ்வுகளில் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவர். இந்த சமயங்களில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11-ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அக்டோபர் 30ஆம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு நாளை (செப்.9) முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்த உத்தரவால் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் போராட்டங்களுக்கு முறையான அனுமதி பெற்று நடத்தலாம்.

மேலும் மாவட்டத்தில் நாளை முதல் (செப்.9) முதல் 15ஆம் தேதி வரையும், அக்.25 முதல் 31-ம் தேதி வரையும் வெளிமாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வாடகை வாகனங்களில் தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு மரியாதை செலுத்த வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதி சீட்டு பெற்றுவர வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைத்துக் கொண்டோ, பேனர்கள் கட்டிக்கொண்டோ வரக்கூடாது. வழிகளில் பட்டாசுகள் வெடிக்கவோ மேற்கூரைகளில் பயணிக்கவோ அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோரின் வாகனங்களில் சாத, மத உணர்வை தூண்டும் வாசகங்கள் மற்றும் பதாகைகள் இடம்பெற்றிருக்கக் கூடாது, சாதி பெயருக்கான முழக்கங்கள் எழுப்ப கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் வரும் செப்டம்பர் 10, மற்றும் 11 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+